46. திருநாகைக்காரோணம் பதிக வரலாறு: சுந்தரர், திருவாரூரிலிருந்து திருநாகைக் காரோணத் திறைவரைத் தொழுது பொற்பூணும், மணிப்பூணும், நவமணிகளும், ஆடை, சாந்தம், குதிரை, சுரிகை முதலியனவும் வேண்டிப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. கழறிற். புரா. 63) குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவர், தம் அடியவர்க்கு இம்மையே அருள்புரிபவராதலின், இம்மைக்கு வேண்டுவன பலவற்றையும் அவர் பால் வற்புறுத்தி வேண்டி அருளிச் செய்தது. பண்: கொல்லிக்கௌவாணம் பதிக எண்: 46 திருச்சிற்றம்பலம் 467. | பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் | | பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர் | | செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் | | செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள் இரங்கீர் | | முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை | | யவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும் | | கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் | | கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே. | | 1 |
1. பொ-ரை: கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே, நீர், பலவூர்களிற் சென்று, பல பாமாலைகளைப் பாடி இரந்து உண்பீர்; அங்ஙனம் இரக்குங்கால், பிச்சைஇட வருகின்ற, பாவைபோலும் மகளிரோடு பொய்யான சொற்களைப் பேசிக் கரவு கொண்டு திரிவீர்; இறந்தவரது எலும்புகளை மேலே பூண்டுகொண்டு, எருதின்மேல் ஏறித்திரிவீர்; இவைகளைப் போலவே, உள்ள பொருளை மறைத்துவைத்து, என்பொருட்டு ஒரு நாளும் மனம் இரங்காது, ஏதும் இல்லை என்பீர்; இவையெல்லாம் உமக்குச் சிறிதும் ஒவ்வா; இப்பொழுது யான் அணிவதற்கு முத்தாரமும், மேற்பட்டு விளங்குகின்ற மாணிக்கமாலை வயிரமாலைகளும் ஆகிய அவைகளைத் தந்து, உடம்பிற் பூசிக் கொள்வதற்கு, இனி
|