65. திருநின்றியூர் பதிக வரலாறு: சுந்தரர், திருச்மெ்பொன்பள்ளி முதலான பதிகளை வணங்கிக் கொண்டு செல்லும்பொழுது, திருநின்றியூர் இறைவரைத் தொழுது திருநாவுக்கரசர் பாடிய ஏழ் எழுநூறு (4900) திருப்பதிகங்களையும் சிறப்பித்துப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 150) குறிப்பு: இத்திருப்பதிகம், "அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத" எனத் தொடங்கும் திருப்பதிகத்தோடு (தி. 7 ப. 55) ஒத்தது. பண்: தக்கேசி பதிக எண்: 65 திருச்சிற்றம்பலம் 665. | திருவும் வண்மையுந் திண்டிற லரசுஞ் | | சிலந்தியார் செய்த செய்பணி கண்டு | | மருவு கோச்செங்க ணான்றனக் களித்த | | வார்த்தை கேட்டுநுன் மலரடி யடைந்தேன் | | பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப் | | பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித் | | தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித் | | திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே. | | 1 |
1. பொ-ரை: பெருகி வருகின்ற காவிரியாற்றின் நீர், கொணர்ந்து தள்ளிய பல மணிகளை, சிறுமகாரது பல குழுக்கள், விளையாட்டிற் சென்று எடுத்து, தெருக்களிலும், திண்ணைகளிலும், முற்றங்களிலும் குவிக்கின்ற, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, நீ, சிலந்தி செய்த செய்கைத் தொண்டினைக் கண்டு, அதன் மறுபிறப்பாய் வந்த கோச்செங்கட் சோழ நாயனார்க்கு, செல்வத்தையும், கொடைத் தன்மையையும், திண்ணிய ஆற்றலை உடைய அரசாட்சியையும் அளித்த செய்தியைக் கேட்டு, அடியேன் உனது மலர் போலும் திருவடியைப் புகலிடமாக அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள். கு-ரை: சிவத் தொண்டு செய்யும் உணர்வு பெற்றிருந்தமையின்,
|