‘திரு இசைப்பா’ என்பது, ‘கடவுட் டன்மை பொருந்திய இசைப் பாட்டுக்கள்’ எனப் பொருள் தரும். தேவாரத் திருப்பதிகங்கட்குப் பின்னர் அவைபோல அருளாசிரியர் சிலரால் இசைத் தமிழாக அருளிச்செய்யப்பட்ட திருப்பதிகங்களே ‘திருவிசைப்பா’ எனப் பெயர்பெற்றன. எனினும். தேவாரத்தில் உள்ளதுபோல இவற்றுள் தாளத்தோடு அமைந்த திருப்பதிகங்கள் மிகுதியாக இல்லாமல், பண் மட்டில் அமைந்த திருப்பதிகங்களே மிகுதியாக உள்ளன. திருவிசைப்பாக்களில் முன்னிற்பவை, திருமாளிகைத் தேவர் அருளிச் செய்த திருவிசைப்பாக்கள்.
|