இத்திருப்பதிகம், தில்லைப் பெருமானிடத்தும், அவன் அடியாரிடத்தும் அன்பு செய்யமாட்டாதவரது இழிபுணர்த்தி, அவரைக் காணுதலும், அவரொடு பேசுதலும் ஆகாமையை உணர்த்தியருள்கின்றது. 35. இணங்கு-ஒப்பு. ‘சித்தத்தினேற்குக் கண் காணா; வாய் பேசாது’ என இயையும். எனவே, இஃது ஏனைத் திருப்பாட்டுக்களினும் சென்று இயைவதாதல் அறிக. மணங்கொள்-பல விழாக்களைக்கொண்ட ‘தில்லை வாணனது மணத்தை (கூட்டத்தை)ப் பெற்ற அடியார்’ என்க. வண்மை-வளப்பம்; சிறப்பு. வீறுஇல்-பெருமை இல்லாத, ‘கோரம்’ என்பதில், ரகரம் றகரமாயும், அகரமாயும் திரிந்து நின்றன. கோரம்-கொடுமை. பீறல் பிண்ட-ஓட்டை உடம்பையுடைய. உயிர் வாழ்தலால் பயன் இன்மையின், ‘‘பிணங்கள்’’ என இகழ்கின்றவர், அக்காரணத்தானே உடம்பின் இயல்பை விதந்தோதினார். பிதற்றுதலுடைமை பற்றி, ‘பேய்கள்’ என்றார். 36. ஈண்டு சோதி-மிக்க ஒளி; இஃது ‘‘இலங்கு’’ என்பதனோடு முடியும். அலங்கல்-மாலை; என்றது பொன்னரி மாலையை; இதனையுடையது தில்லை. தூர்த்த வார்த்தை- |