பக்கம் எண் :



11. திருமுகத்தலை

பண் - பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

112. 
 

 புவனநா யகனே ! அகவுயிர்க் கமுதே !
   பூரணா ! ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே ! பணிசெய்வார்க் கிரங்கும்
   பசுபதீ ! பன்னகா பரணா !
அவனிஞா யிறுபோன் றருள்புரிந் தடியேன்
   அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
   தனியனேன் தனிமைநீங் குதற்கே.               (1)
 

113. 
 

புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து
   புணர்பொரு ளுணர்வுநூல் வகையால்
வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்
   வளரொளி மணிநெடுங் குன்றே ! 
 

இத்திருப்பதிகத்தில்  ஆசிரியர்   இறைவன்    தமக்கு     அருள்
செய்தவகையைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

112.     புவனம்-உலகம் ; இவ்வஃறிணை இயற்பெயர்    பன்மைப்
பொருட்டாய், ‘எல்லா உலகங்கட்கும், எனப் பொருள் தந்தது. இவ்வாறு
வருவதனை, ‘சாதியொருமை’ என்ப. அகம்-இடம்; அக உயிர் -உன்னை
அடைந்த   உயிர்கள்;   முத்தான்மாக்கள்,  ‘அவனிக்கு’  என  உருபு
விரித்து,  உலகிற்கு  இருளை  நீக்கி ஒளியைத் தரும் ஞாயிறுபோன்று
மருளை  நீக்கி  அருளை வழங்கி, என உரைக்க.  பசுபதி-உயிர்கட்குத்
தலைவன். பன்னக ஆபரணன்- பாம்பாகிய அணிகளை   யுடையவன ;
தனியனேன்  -  துணை  இல்லாதேன். தனிமை நீங்குதற்கு- அந்நிலை
நீங்குமாறு ; என்றது, யான் துணை பெற்று உய்யும்படி’ என்றவாறு.

113,     புழுங்குதல்-வேதல்  ‘‘புழுங்கு’’  என்றது,  ‘‘வினையேன்’’
என்பதன்   இறுதிநிலையோடு   முடியும்.   ‘‘புழுங்கு  தீவினையேள்’’
என்றது,  ‘தீவினையால்  புழுங்குவேன்’  என்றவாறாம்.   புகுந்து-எதிர்
வந்து. புணர் பொருள் உணர்வு