பக்கம் எண் :

திருமுறை]13. கங்கைகொண்ட சோளேச்சரம்91



 

எருதுவா கனனாம் எயில்கள்மூன் றெரித்த
   ஏறுசே வகனுமாம் ! பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் ! கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானே.                 (5)
 

138. 
 

அண்டம்ஓர் அணுவாம் பெருமைகொண் டணுஓர்
   அண்டமாம் சிறுமைகொண் டடியேன்
உண்டவூண் உனக்காம் வகையென துள்ளம்
   உள்கலந் தெழுபரஞ் சோதி !
கொண்டநாண் பாம்பாப் பெருவரை வில்லிற்
   குறுகலர் புரங்கள்மூன் றெரித்த
கண்டனே ! நீல கண்டனே ! கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானே.                 (6)
 

வடிவங்கள்.    ‘அவரவரும் அன்பினாற்கொண்ட மூர்த்திகள்  பலரும்
தானாய்  இருந்து  அவரவர்  கருதிய பயனைத் தருபவன்  பரமசிவன்
ஒருவனே’ என்றவாறு. தனது உண்மை நிலையை உணரும் ஞானியரை,
‘‘அகவுயிர்’’  என்றும்,  அவர்க்குப்  பரமுத்தி யளித்தலை ‘‘அமுதாம்’’
என்றும்  குறித்தனர்  என்க.  ‘‘ஆருருவ  உள்குவார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய்  நிற்கின்ற  அருளும்  தோன்றும்’’  (திருமுறை-6-18,11.)
என்று திருநாவுக்கரசர் அருளிச்செய்தமை காண்க. ஏறு சேவகன்-மிக்க
வீரத்தையுடையவன்.

138.    ‘‘கொண்டு’’ என வந்தவை இரண்டும் வினைச் செவ்வெண்.
இம்   முதலடியின்  பொருளை,  ‘‘அண்டங்க  ளெல்லாம்  அணுவாக
அணுக்க  ளெல்லாம்-அண்டங்க  ளாகப் பெரிதாய்ச்  சிறிதாயினானும்’’
எனப்    பின்    வந்தோர்   கூறியவாறு   அறிக   (பரஞ்சோதியார்
திருவிளையாடற்     புராணம்-கடவுள்     வாழ்த்து).        உண்ட
ஊண்நுகர்ந்த-பிராரத்த  வினை.  ‘அவனே  தானே  ஆகிய அந்நெறி
ஏகனாகி  இறைபணி  நிற்’பார்க்கு  (சிவஞான  போதம்-சூ.12)  வரும்
பிராரத்த   வினை  அவருக்கு  ஆகாதவாறு,  ‘இவனுக்குச்  செய்தது
எனக்குச்  செய்தது  என்று  உடனாய்  நின்று  ஏற்றுக்  கொள்ளுதல்’
(சிவஞான  சித்தி-சூ.10-1.) பற்றி, ‘‘அடியேன் உண்ட ஊண்  உனக்காம்
வகை  எனது  உள்ளம் உள்கலந்து’’ என்றார். இறைபணியில் நிற்பவர்
தமக்கு  வருவன  பலவற்றையும்  ’சிவார்ப்பணம்’  எனக்கொள்ளுதல்,
பிராரத்தம்   தாக்காமைப்  பொருட்டேயாம்.  உண்ணும் உணவையும்
சிவனுக்குச் செய்யும்