பக்கம் எண் :



17. திருவிடைமருதூர்

பண்-பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்
 

173.

வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய
   வீங்கிருள் நடுநல்யா மத்தோர்
பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து
   பாவியேன் காதல்செய் காதில்
ஐயசெம் பொன்தோட் டவிர்சடை மொழுப்பின்
   அழிவழ கியதிரு நீற்று
மையசெங் கண்டத் தண்டவா னவர்கோன்
   மருவிடந் திருவிடை மருதே.                    (1)
 

174.

இந்திர லோக முழுவதும் பணிகேட்
   டிணையடி தொழுதெழத் தாம்போய்
ஐந்தலை நாக மேகலை யரையா
   அகந்தொறும் பலிதிரி யடிகள்
 

இத்திருப்பதிகம், இறைவன்  திருவிடைமருதூரை இடமாகக் கொண்டு
எழுந்தருளியுள்ள சிறப்பை வியந்தருளிச்செய்தது.

173.     முதலடியை இறுதியடியின்முன் கூட்டுக. ‘ஓர் பாந்தள்’ என
இயையும்.     பைய-படத்தை     யுடைய.           பாந்தள்-பாம்பு.
உமிழ்ந்து-உமிழ்தலால்;  இது,  ‘‘காதல்  செய்’’  என்பதனோடு முடியும்.
‘சிவபெருமானது  திருச்செவியில் செம்பொன்   தோடேயன்றிப் பாம்பும்
குழைபோல    உள்ளது’    என்க.   ஐய-அழகிய.    மொழுப்பு-முடி.
‘மொழுப்பினால்   அழிகின்ற   அழகிய   திருநீறு’  என்க.   திருநீறு
அழிதற்குக்  காரணம்  முன்னே  (பாட்டு-170)  கூறப்பட்டது.   வெய்ய
செஞ்சோதி   மண்டலம்-ஞாயிற்று  மண்டலம்.  ‘ஞாயிற்று   மண்டலம்
விளங்க  அதனிடையே  மிக்க  இருளையுடைய  நள்ளிரவும்  உள்ளது
போலத்  தோன்றுகின்ற  கரிய  நிறத்தை  ஒருபுடைகொண்ட   சிவந்த
கழுத்து’  என்க.  மைய-கருநிறத்தையுடைய.   ‘செம்பொற்றோட்டையும்,
அழகிய திருநீற்றையும், செங்கண்டத்தையும் உடைய கோன்’ என்க.

174. ‘தம்மை விண்ணுலகம்  முழுவதும் வணங்கி நிற்கத் தாம்போய்
அகந்தொறும் பிச்சைக்கு உழல்கின்றார்’ என்பதாம்.