இத் திருப்பதிகம் தில்லைப் பெருமானை நேர்படக் காணும் வேட்கை மீதூர்வால் அருளிச்செய்யப்பட்டது. 205. துச்சான-இழிவான செயல்களை. ஆள் உகப்பார்- தமக்கு அடிமையாய் உள்ளவரை விரும்புகின்ற தலைவர். ‘கைத்தாலும்’ என்பது, ‘‘கைச்சாலும்’ எனப் போலியாயிற்று. கைத்தல்-கசத்தல். கதலி வாழை; இஃது ஆகுபெயராய் அதன் காயைக் குறித்தது. ‘‘இலை வேம்பு’’ என்றதனை, ‘வேம்பு இலை’ என மாற்றுக. ‘வாழையின் பிஞ்சுக் காயும், வேப்பிலையும் கசப்பனவாயினும் அவற்றையும் கறியாகக் கொள்வர் மக்கள்’ என்னும் இவ்வுவமையை முன்னர் வைத்து உரைக்க. எச்சார்வும்-யாதொரு துணையும். ‘எனக்கு இல்லாமை’ என உரைக்க. நச்சாய்-நீ விரும்பவில்லை. ‘இது பொருந்துவதோ’ என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. காண், முன்னிலையசை. 206. ‘சாய’ என்பதன் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. தம் பானை சாயப் பற்றார்-ஒருவரும் தங்கள் பானையைக் கீழே விழுமாறு பிடிக்கமாட்டார்கள்; அஃதாவது, ‘கருத்தின்றிப் |