பக்கம் எண் :



6. வேணாட்டடிகள் திருவிசைப்பா

21. கோயில்

பண்-புறநீர்மை

திருச்சிற்றம்பலம்
 

205.

துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆள்உகப்பார்?
கைச்சாலும் சிறுகதலி இலைவேம்புங் கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீஅறிந்தும் எனதுபணி
நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.    (1)
 

206.

தம்பானை சாய்ப்பற்றார் என்னும் முதுசொல்லும்
எம்போல்வார்க் கில்லாமை என்னளவே அறிந்தொழிந்
                                          [தேன்
வம்பானார் பணிஉகத்தி வழிஅடியேன் தொழில் இறையும்
நம்பாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.   (2)
 

இத் திருப்பதிகம்   தில்லைப்   பெருமானை   நேர்படக்  காணும்
வேட்கை மீதூர்வால் அருளிச்செய்யப்பட்டது.

205.     துச்சான-இழிவான செயல்களை. ஆள்   உகப்பார்- தமக்கு
அடிமையாய்   உள்ளவரை   விரும்புகின்ற  தலைவர்.    ‘கைத்தாலும்’
என்பது, ‘‘கைச்சாலும்’ எனப் போலியாயிற்று.  கைத்தல்-கசத்தல்.  கதலி
வாழை;  இஃது  ஆகுபெயராய்  அதன்  காயைக்  குறித்தது.   ‘‘இலை
வேம்பு’’  என்றதனை,  ‘வேம்பு  இலை’  என  மாற்றுக.   ‘வாழையின்
பிஞ்சுக்   காயும்,   வேப்பிலையும்  கசப்பனவாயினும்    அவற்றையும்
கறியாகக்   கொள்வர்  மக்கள்’  என்னும்  இவ்வுவமையை    முன்னர்
வைத்து    உரைக்க.   எச்சார்வும்-யாதொரு   துணையும்.    ‘எனக்கு
இல்லாமை’   என   உரைக்க.   நச்சாய்-நீ   விரும்பவில்லை.   ‘இது
பொருந்துவதோ’  என்னும்  குறிப்பெச்சம்  வருவித்து   முடிக்க. காண்,
முன்னிலையசை.

206. ‘சாய’ என்பதன் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. தம் பானை
சாயப்   பற்றார்-ஒருவரும்   தங்கள்  பானையைக்   கீழே  விழுமாறு
பிடிக்கமாட்டார்கள்; அஃதாவது, ‘கருத்தின்றிப்