பக்கம் எண் :

142வேணாட்டடிகள் திருவிசைப்பா[ஒன்பதாந்


210.

படுமதமும் இடவயிறும் உடையகளி றுடையபிரான்
அடிஅறிய உணர்த்துவதும் அகத்தியனுக் கோத்தன்றே
இடுவதுபுல் ஓர்எருதுக் கொன்றினுக்கு வையிடுதல்
நடுவிதுவோ ? திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.   (6)
 

211.

மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு வானவர்க்கும்
கண்ணாவாய் கண்ணாகா தொழிதலும்நான் மிகக்கலங்கி
அண்ணாவோ என்றண்ணாந் தலமந்து விளித்தாலும்
நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.    (7)
 

நிற்றல்     முதலிய  மூன்றும்    செயலற்றிருக்கும்    நிலையாதலின்,
அக்காலங்களில்  நினைதலும்,  எழுதல்  கிளர்ந்தெழுந்து   செயற்படும்
நிலையாகலின்,   அக்காலத்தில்   தொழுதலும்   கூடுவவாயின.   ‘இரு
நிலையிலும்   உன்னை   மறவாதிருக்கின்ற  யான்,   ஒரோவொருகால்
எக்காரணத்தாலேனும்   மறந்திருப்பினும்  இருக்கவொட்டாய்’    என்க.
இதன்பின், ‘ஆயினும்’ என்பது வருவிக்க. ஒன்றி-உன்னைப்   பொருந்தி;
என்றது,  பிறவற்றை  மறந்து’ என்றவாறு. இது, ‘நினையாது’  என்பதில்,
‘நினைதல்’   வினையோடு   முடிந்தது.   ‘‘வரவு’’   என்றதில்,   ஓடு
உருபுவிரித்து,  ‘வரவொடு  நில்லாயாய்;  ஆப்போல்  கதறுவித்தி’ என
மாற்றி  உரைக்க. கன்று பிரி-கன்றினால் பிரியப்பட்ட, ‘‘கற்றா’’ என்றது,
வாளாபெயராய் நின்றது.

210. படுமதம்-மிக்க மதம். இடவயிறு-இடம் பெரிதாயவயிறு. இவற்றை
யுடையகளிறு,  மூத்த  பிள்ளையார்.   ‘அயிராவணம்’ என்பாரும் உளர்.
‘‘பிரான்’’  என்றது,  ‘பிரானாகிய  நீ’ என, முன்னிலைக்கண் படர்க்கை
வந்த    வழுவமைதி.    அடி     அறிய-    உனது    திருவருளை
உணர்தற்பொருட்டு.  ‘அடி அறிய ஓத்து  உணர்த்துவது அகத்தியனுக்கு
அன்றே  எனவும்,  ‘இது  நடுவோ’   எனவும் மாற்றுக. ஓத்து-ஆகமப்
பொருள்.    சிவபெருமான்   அகத்திய    முனிவருக்கு   ஆகமத்தை
உபதேசித்தார்   என்பதும்  வரலாறு.   ‘அகத்தியனுக்கு  அந்நிலையை
அருளி,     அடியேனுக்கு     உலகியலை     அருளினாய்;    இது,
இரண்டெருதுகளை   உடைய   ஒருவன்,    ஒன்றற்குப்   புல்  இட்டு,
மற்றொன்றற்கு வைக்கோல் இடுதல் போல்வது’ என்பதாம்.

211.     ஒடுக்கள், எண்ணிடைச்   சொல். ‘மண்ணின்கண் அளவும்
(பொருந்திய)  மனிதர்க்கும்,  விண்ணின்கண்  அளவும்  வானவர்க்கும்’
என நிரல்நிரை வந்தது. கண்-களைகண்’