பக்கம் எண் :



7. திருவாளியமுதனார் திருவிசைப்பா

22. கோயில் - பாதாதிகேசம்

பண்-பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்
 

215.

மையல் மாதொரு கூறன் மால்விடை
 
   யேறி மான்மறி யேந்தி யதடங்
கையன் கார்புரை யுங்கறைக்
   கண்டன் கனன்மழுவான்
ஐயன் ஆரழல் ஆடு வான்அணி
   நீர்வயல் தில்லை யம்பலத்தான்
செய்யபாதம் வந்தென் சிந்தை
   யுள்ளிடங் கொண்டனவே                       (1)
 

216.

சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்ததட
   முந்த டம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணி
   யார்தில்லை யம்பலவன்
 


இதுவும்,     ‘உயர்கொடி  ஆடை’  த்  திருப்பதிகம்  (2)  போல
இறைவனது  திருவுருவைப் பாதாதி கேசமாகப் புகழ்வது என்பது இதன்
பெயராலே   விளங்கும்.   இதன்   திருப்பாடல்கள்    இரண்டாவதும்
நான்காவது  மாய  அடிகள்  சீர்  குறைந்து  இடையே  கூன்  பெற்று
வருவன.

215.   மையல் மாது-காதலை உடைய பெண்டு; உமை - ‘காதலுக்கு
இடமாய  பெண்டு’  என்றும்  ஆம். கார் புரையும் - மேகம்  போலும்.
கறை - கறுப்பு. இதனுள், ‘‘கறை, சிந்தை’’ என்பவை கூன்.

216.  சலம் - நீரின்கண். பொன் - அழகு. தாழ்ந்து எழுந்து  -ஆழ
வேரூன்றி  வளர்ந்த. தடம் - குளத்தின்கண். ‘தடமும்’ என்பது  பாடம்
அன்று,   தடம்   புனல்வாய்   -மிக்க   நீரின்கண்   உள்ள.   ‘அத்
தடம்புனல்வாய்’ எனச் சுட்டு வருவிக்க.