பக்கம் எண் :



23. கோயில் - ‘‘பவளமால்வரை’’

பண் - நட்டராகம்

திருச்சிற்றம்பலம்
 

226.பவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர்
   படரொளி தருதிரு நீறும்
குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும்
   துன்றுபொற் குழற்றிருச் சடையுந்
திவள மாளிகை சூழ்தரு தில்லையுட்
   டிருநடம் புரிகின்ற
தவள வண்ணனை நினைதொறும் என்மனம்
   தழல்மெழு கொக்கின்றதே.                    (1)
 

227.

ஒக்க ஒட்டந்த அந்தியும் மதியமும்
   அலைகடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும்
   நிறையழிந் திருப்பேனைச்
 


‘இது   தில்லைப் பெருமானைக் காதலித்தாள்  ஒருத்தியது கூற்றாக
அருளிச்செய்தது’    என்பதை    ஆசிரியரே    திருக்கடைக்காப்பில்
வெளிப்படுத்தியுள்ளார்.     இதன்கண்     உள்ள        பாடல்கள்
அறுசீரடியாலாயவையெனினும்,      முதற்பாட்டின்    இரண்டடிகளில்
எழுசீர்கள் வந்தன. இது முழுதும் அந்தாதியாய் அமைந்தது.

226. படர்தல்-மூடுதல், ‘வரையில்’  எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.
பவளமலை  சிவபெருமானுக்கும், அதனை மூடிய  பனி அப்பெருமான்
பூசியுள்ள திருநீற்றுக்கும் உவமை.  கண்ணி-முடியில் அணியும் மாலை.
‘‘கொன்றை’’      என்றதும்      அதனாலாகிய     கண்ணியையே.
துன்று-பொருந்திய.      பொன்-பொன்போலும்,      குழல்-சுருண்ட,
திவள-விளங்க,  ‘திருநீறும்,   சடையும்  திவள  நடம்புரிகின்ற’ என்க.
தவளவண்ணன்-வெண்மை நிறத்தை உடையவன்.

227.     ஒக்க ஓட்டந்த-ஒருசேர ஓடிவந்த. அந்தி-மாலைக்  காலம்.
‘மாலைக்  காலமும், சந்திரனும் ஒருசேர ஓடிவந்தன’ என்றான்.  பின்பு,
‘அவை இரண்டும் கடல் ஒலியோடு சேர்ந்து