கொள்க. இறைவன், வலத் திருவடியை ஊன்றியும், இடத்திருவடியைத் தூக்கியும் நடனம் செய்தல் அறிக. ‘ பாதத்தின் கண்’ என உருபு விரிக்க. மழலை-இனிய ஓசையை உடைய. தீ மெய்-நெருப்புப்போலும் நிறத்தை யுடைய. 241. கைதை-தாழை. குவிந்த-திரண்டுள்ள. கரை-கடற்கரை.அதன் இடப்பகுதிகள் பற்றி, ‘கரைகள்’ எனப்பலவாகக் கூறினார். திரை-அலை. ‘தில்லைச் சிற்றம்பலம்’ என இயையும், சிற்றம்பலம், இங்குக் கோயிலைக் குறித்தது. மல்கு-அழகு நிறைந்த. வரை-மலை. மலிந்த மணி-நிறைந்த இரத்தினங்களால் ஆகிய, ‘மண்டபத்து ஆடும்’ என இயையும். 242. ‘‘அவர்’’ என்பதனை, ‘‘முனிவர்’’ என்றதன்பின்னும், ‘‘அணி அம்பலவா’’ என்பதை, ‘‘அத்தா’’ என்றதன்பின்னும் கூட்டுக. ‘‘நிரந்த தலம்’ என்பது முன்னும் வந்தது (2), ‘முளை மதி’ என இயைத்து. ‘புதுவதாய்த் தோன்றும் |