பக்கம் எண் :



9. சேதிராயர் திருவிசைப்பா

28. கோயில்

பண்-பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்
 

279.

சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச்
சால நாள்அயற் சார்வதி னால்இவள்
வேலை யார்விட முண்டுகந் தீரென்று
மால தாகுமென் வாணுதலே.                       (1)
 

280.

வாணுதற் கொடி மாலது வாய்மிக
நாண மற்றனள் நான்அறி யேன்இனிச்
சேணுதற் பொலி தில்லையு ளீர்உமைக்
காணில் எய்ப்பிலள் காரிகையே.                   (2)
 


இத்திருப்பதிகம்,     தில்லைப் பெருமான்மீது கொண்ட காதலால்
மெலிகின்றாள்     ஒருத்தியது        ஆற்றாமையைச்     செவிலி
அப்பெருமான்முன்     சென்று     விண்ணப்பித்துக்கொண்டவாறாக
அருளிச்செய்யப்பட்டது.    இதுவும்    அந்தாதியாய்    அமைந்தது.
இதன்கண்   உள்ள   திருப்பாடல்கள்  இறுதியடி  ஒருசீர்  குறைந்து
வருகின்றன. இவ்வாறு வருதல் இசைப்பாட்டிற்கு இயல்பு.

279.     அயல்   சார்வது-பக்கத்தில்   அணுகி   நிற்றல்.   இது
நாள்தோறுமாம்.    வேலை    ஆர்-கடலில்   நிறைந்து  தோன்றிய.
உகந்தீர்-அதனையே    அமுதமாகக்    கொண்டீர்.    என்று-என்று
இடையறாது   கூறி.   மால்   ஆகும்-பித்துடையவள்   ஆகின்றாள்.
‘அவளுக்கு   அருளல்   வேண்டும்’  என்பது  குறிப்பெச்சம்.  அது,
பகுதிப்பொருள்  விகுதி.  வாள்  நுதல்-ஒளியையுடைய நெற்றி; இஃது,
ஆகுபெயராய். ‘ஒளி பொருந்திய நெற்றியை உடைய என்மகள்’ எனப்
பொருள்தந்தது.   ‘‘அயற்   சார்வதினால்  மாலதாகும்’’  என்றதனால்,
இறைவரது வசிகரம் விளங்கும். ‘‘விடம் உண்டு உகந்தீர்’’ என்றதனால்,
‘அதனினும் நான் கொடியளோ’ என்பது குறித்தாள்.

280,     கொடி-  கொடிபோன்றவள்.  மிக   அற்றனள்-முழுதும்
நீங்கினாள்.  ‘‘இனி’’  என்றதன்பின்  ‘விளைவது’  என்பது வருவிக்க.
‘இனித் தெருவில் வந்து உம்மைத் தூற்றுவாள்’