New Page 1
இயற்கைப்
புணர்ச்சி
முல்லையும், கோங்கு பாலைநிலத்துப்
பூவாதலாற் பாலையும், காந்தள் குறிஞ்சி நிலத்துப் பூவாதலாற் குறிஞ்சியுமென இவ்வைந்து பூவினாலும்
ஐந்திணையுஞ் சுட்டினார். ஆகலாற்றா மெடுத்துக் கொண்ட அகத்தமிழின் பெருமைகூறாது தில்லைநகரின்
பெருமை கூறினார். நிலமயக்கங் கூறுதலான், அற்றன்று அஃதே கூறினார். என்னை, சொல்லின் முடிவினப்
பொருண் முடித்த லென்னுந் தந்திரவுத்தியாற் புணர்தலும் புணர்தனிமித்தமுமாகிய குறிஞ்சியே கூறினார்.
என்னை, பைங்காந்தளென்று குறிஞ்சிக்குரிய பூவிலே முடித்தலான். அன்றியும் பூவினானே நிலமுணர்த்தியவாறு
இத்திருக்கோவையின்கண் முன்னர்க் “குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய்”
(தி.8 கோவை பா.205) என்னும் பாட்டினுட் கண்டு கொள்க. அல்லதூஉஞ் “சினையிற்கூறு முதலறிகிளவி”
(தொல் - வேற்றுமைமயங்கியல் - 31) என்னுமாகு பெயரானுமாம். ஆயின் குறிஞ்சியே கூறவமையாதோ நிலமயக்கங்
கூறவேண்டியது எற்றிற்கெனின், ஓரிடத்தொரு கலியாணமுண்டானால் எல்லாரிடத்து முண்டாகிய ஆபரணங்களெல்லாம்
அவ்விடத்துக்கூடி அக்கலியாணத்தைச் சிறப்பித்தாற்போலப் பல நிலங்களும் இக்குறிஞ்சியையே சிறப்பித்து
நின்றன. உருவளர் காமன்றன் வென்றிக்கொடியென்றமையின், அன்பினானே நிகழ்ந்த காமப்
பொருளைச்சுட்டினார். யாருங்கேட்போரின்றித் தன்னெஞ்சிற்குச் சொன்னமையின், கந்தருவரொழுக்கத்தையே
யொத்த களவொழுக்கத்தையே சுட்டினார். ஈசர்தில்லை யென்றமையின், வீடுபேற்றின். பயத்ததெனச்
சுட்டினார்.
களவொழுக்கமென்னும் பெயர்பெற்று
வீடுபேற்றின் பயத்ததாய் அன்பினானிகழ்ந்த காமப்பொருணுதலிக் கந்தருவ ரொழுக்கத்தோடொத்துக்
காமனது வென்றிக்கொடிபோன்று ஐந்திணையின்கண்ணும் வென்று விளங்காநின்ற கடிமலர்மாலையின் வரலாறு
இத்திருக்கோவையின்-கணுரைக்கப்படுகின்றதென்றவாறு, களவொழுக்கத்தினை ஒரு மாலையாகவுட்கொண்டு
உருவகவாய் பாட்டா னுணர்த்தினாரென்பது. இன்பத்தை நுதலியதென்றாராயினும், இன்பந் தலைக்கீடாக
அறம் பொருள் இன்பம் வீடென நான்கு பொருளையும் நுதலிற்று. அவற்றுள் வீடுநுதலியவாறு மேலே
சொன்னோம். ஒழிந்த மூன்றனையும் நுதலிய வாறென்னையெனின், ஈண்டுத் தலைமகனும் தலைமகளுமென்று நாட்டினார்.
இவனுக்கு ஆண்குழுவினுள் மிக்காருமொப்பாருமில்லை இழிந்தாரல்லது; இவளுமன்னள். இவர் ஒருவர்கண்ணொருவர்
இன்றியமையாத அன்புடையராகலான், இவர்கண்ணே அம்மூன்றுமுளவாம். இவ்வொழுக்கத்தினது சுவைமிகுதி கேட்கவே
விழைவு விடுத்த விழுமி
|