யூ
மதியுடம் படுத்தல்
யூரென்ன வென்னவும் வாய்திற
வீரொழி வீர்பழியேற்
பேரென்ன வோவுரை யீர்விரை
யீர்ங்குழற் பேதையரே.
56
_______________________________________________________________
ஒருகலையாகிய திங்களை வைத்த; கார்
என்ன ஆரும் கறை மிடற்று அம்பலவன் கயிலை - கொண்டலென்று சொல்லும் வண்ணம் நிறைந்த கறுப்பையுடைத்தாகிய
மிடற்றையுடைய அம்பலவனது கயிலைக்கண்; ஊர் என்ன என்னவும் வாய்திறவீர் - நும்முடைய ஊர்கள் பெயர்
முதலாயினவற்றான் எத்தன்மைய வென்று சொல்லவும் வாய்திறக்கின்றிலீர்; பழியேல் ஒழிவீர் -
ஊர் கூறுதல் பழியாயின் அதனையொழிமின்; பேர் என்னவோ விரை ஈர்ங் குழல் பேதையரே உரையீர்
- நும்முடைய பெயர்கள் எத்தன்மையவோ நறுநாற்றத்தையும் நெய்ப்பையுமுடையவாகிய குழலையுடைய பேதையீர்,
உரைப்பீராமின் எ-று.
தனித்திங்கள் ஒப்பில்லாத திங்களெனினுமமையும்.
ஓகாரம்: வினா. தலைமகளுந் தோழியும் ஓரூராரல்லரென்று கருதினான் போல ஊரென்னவெனப் பன்மையாற்
கூறினான். என்னை,
இரந்து குறையுறாது கிழவியுந் தோழியு
மொருங்குதலைப் பெய்த செவ்வி நோக்கிப்
பதியும் பெயரும் பிறவும் வினா அய்ப்
புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து
மதியுடம் படுதற்கு முரியனென்ப.
-இறையனாரகப்பொருள்,
6
என்பதிலக்கணமாதலின். பேதையரேயெனச்
சிறுபான்மை ஏகாரம் பெற்றது. ஊருஞ் சொல்லாதாரைப் பெயர்கேட்கவே வேறு கருத்துடையனென்பது
விளங்கும். வாய் திறவா தொழிவீ ரென்பதூஉம் பாடம்.
|