17
வரைவு முடுக்கம்
17.5 பழிவரவுரைத்துப் பகல்
வரவுவிலக்கல்
பழிவரவுரைத்துப் பகல்வரவு விலக்கல்
என்பது இவ்விருளிடை வாராதொழிகென்றது பகல்வரச் சொன்னவாறா மெனவுட்கொண்டு, பகற்குறிச் சென்று
நிற்ப, தோழி யெதிர்ப்பட்டுப் பகல் வந்து எமக்குச் செய்யாநின்ற மெய்யாகியவருள் புறத்தாரறிந்து
வெளிப்பட்டுப் பழியாகப் புகுதாநின்றது; இனிப் பகல்வர வொழிவாயாகவெனப் பழிவருதல் கூறிப்
பகல் வரவு விலக்காநிற்றல். அதற்குச் செய்யுள்-
254. களிறுற்ற செல்லல்
களைவயிற்
பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை
நாட பெடைநடையோ
_____________________________________________________________
17.5. ஆங்ஙனம் ஒழுகும் அடல்வே
லண்ணலைப்
பாங்கி ஐய பகல்வர லென்றது.
இதன் பொருள்: களிறு உற்ற
செல்லல் பெண் களைவயின் - அசும்பின் கட்பட்டுக் களிறுற்ற வருத்தத்தைப் பிடி தீர்க்கின்ற
விடத்து; மரம் கைஞ் ஞெமிர்த்துப் பிளிறு உற்ற வானப் பெருவரை நாட - மரத்தைக் கையான் முறித்துப்
பிளிறுதலை யுற்ற வானத்தைத்தோயும் பெரியவரையையுடைய நாடனே; பெடை நடையோடு ஒளிறு உற்ற மேனியன்
சிற்றம்பலம் நெஞ்சு உறாதவர் போல் - அன்னப்பெடையினது நடைபோலு நடையையுடையாளொடு கூடி
விளங்குதலை யுற்ற மேனியையுடையவனது சிற்றம்பலத்தை நெஞ்சா லுறாதாரைப் போல யாமிடர்ப்பட;
வெளிறு உற்ற வான் பழியாம்-வெளிப் படுதலையுற்ற பெரிய பழியாகாநின்றது; நீ பகல் செய்யும் மெய்
அருள்-நீ பகல்வந்து எமக்குச் செய்யும் மெய்யாகியவருள் எ-று.
மெய்யருளென்றது மெய்யாக
வருளுகின்றாயேனு மென்றவாறு. வழியல்லாவழிச் சேறலான் அசும்பிற் பட்ட களிற்றினை வாங்குதற்குப்
பிடி முயல்கின்றாற்போல, இவளை யெய்துதற் குபாயமல்லாத விவ்வொழுக்கத்தினை விரும்பு நின்னை
இதனினின்றும் மாற்றுதற்கு யான் முயலாநின்றேனென உள்ளுறை காண்க. மெய்ப்பாடு: அது. பயன்: பகற்குறிவிலக்கி
வரைவு கடாதல்.
254
|