வாழ்த்து
வையம் நீடுக மாமழை மன்னுக
மெய் விரும்பிய அன்பர்
விளங்குக
சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே.
-பெரியபுராணம்.
வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள்
வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்.
-கந்தபுராணம்.
மல்குக வேத வேள்வி வழங்குக
சுரந்து வானம்
பல்கு வளங்கள் எங்கும் பரவுக
அறங்கள் இன்பம்
நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச்
சைவம் ஓங்கிப்
புல்குக உயிர்கட் கெல்லாம்
புரவலன் செங்கோல் வாழ்க.
-திருவிளையாடற் புராணம்.
திருவார் கமலைப் பதிவாழ்க
அப்பதி
சேரும்நின்றன்
மருவார் மரபும் திருநீறும்
கண்டியும்
வாழ்கஅருட்
குருவாகும் நின்றன் திருக்கூட்டம்
வாழ்கநற்
கோநிரைகள்
தெருவாழ் தருமைத் திருஞான
சம்பந்த
தேசிகனே.
-ஆதீன அருள் நூல்.
|