பக்கம் எண் :

மூலமும் உரையும்329



30
  மதுநிறை பிலிற்றிய பூவொடு நெருங்கிச்
35
  சூரரக் கன்னிய ருடல்பனி செய்யுங்
கடைக்கான் மடியும் பொங்கர்ப் பக்கமு
மூடி யாடுநர்த் திரையொடு பிணங்கித்
தோழியிற் றீர்க்கும் வையகத் துழனியு
மளவா வூழி மெய்யொடு சூழ்ந்து
40
  நின்றுநின் றோங்கி நிலையறம் பெருக்கு
மானாப் பெரும்புக ழருணகர்க் கூடற்
பெண்ணுடல் பெற்ற சென்னியம் பிறையோன்
பொற்றகடு பரப்பிய கருமணி நிறையென
வண்டுந் தேனு மருள்கிளை முரற்றி
45
  யுடைந்துதமிழ் நறவுண் டுறங்குதார்க் கொன்றையன்
றிருவடி புகழுநர் செல்வம் போலு
மண்ணாந் தெடுத்த வணியுறு வனமுலை
யவன்கழல் சொல்லுந ரருவினை மானு
மலைமுலைப் பகையட மாழ்குறு நுசுப்பு
50
  மற்றப னசைத்த மாசுணம் பரப்பி
யமைத்தது கடுக்கு மணிப்பாம் பல்கு
லாங்கவன் றரித்த கலைமான் கடுக்கு
மிருகுழை கிழிக்கு மரிமதர் மலர்க்கண்
புகர்முகப் புழைக்கை துயிறரு கனவின்
  முடங்குளை கண்ட பெருந்துயர் போல
வுயிரினு நுனித்த வவ்வவ் வுருக்கொடு
பொன்மலை பனிப்பினும் பனியா
வென்னுயிர் வாட்டிய தொடியிளங் கொடிக்கே.

(உரை)
கைகோள்: களவு. தலைவன் கூற்று.

துறை: அவயவங்கூறல்.

     (இ-ம்.) இதற்கு, “தோழிகுறை அவட்சார்த்தி மெய்யுரக் கூறலும்” (தொல். கள. 11) எனவரும் விதிகொள்க.

50-54: புகார்முகம்..............................கொடிக்கே

     (இ-ள்) உயிரினும் நுனித்த அஅ உருக்கொடு-என்னுடைய உயிரினுங்காட்டில் பெரிதும் நுட்பமான அந்த அந்த