30
|
|
மதுநிறை
பிலிற்றிய பூவொடு நெருங்கிச் |
35
|
|
சூரரக்
கன்னிய ருடல்பனி செய்யுங்
கடைக்கான் மடியும் பொங்கர்ப் பக்கமு
மூடி யாடுநர்த் திரையொடு பிணங்கித்
தோழியிற் றீர்க்கும் வையகத் துழனியு
மளவா வூழி மெய்யொடு சூழ்ந்து |
40
|
|
நின்றுநின்
றோங்கி நிலையறம் பெருக்கு
மானாப் பெரும்புக ழருணகர்க் கூடற்
பெண்ணுடல் பெற்ற சென்னியம் பிறையோன்
பொற்றகடு பரப்பிய கருமணி நிறையென
வண்டுந் தேனு மருள்கிளை முரற்றி |
45
|
|
யுடைந்துதமிழ்
நறவுண் டுறங்குதார்க் கொன்றையன்
றிருவடி புகழுநர் செல்வம் போலு
மண்ணாந் தெடுத்த வணியுறு வனமுலை
யவன்கழல் சொல்லுந ரருவினை மானு
மலைமுலைப் பகையட மாழ்குறு நுசுப்பு |
50
|
|
மற்றப
னசைத்த மாசுணம் பரப்பி
யமைத்தது கடுக்கு மணிப்பாம் பல்கு
லாங்கவன் றரித்த கலைமான் கடுக்கு
மிருகுழை கிழிக்கு மரிமதர் மலர்க்கண்
புகர்முகப் புழைக்கை துயிறரு கனவின் |
|
|
முடங்குளை
கண்ட பெருந்துயர் போல
வுயிரினு நுனித்த வவ்வவ் வுருக்கொடு
பொன்மலை பனிப்பினும் பனியா
வென்னுயிர் வாட்டிய தொடியிளங் கொடிக்கே. |
(உரை)
கைகோள்: களவு. தலைவன் கூற்று.
துறை: அவயவங்கூறல்.
(இ-ம்.)
இதற்கு, தோழிகுறை அவட்சார்த்தி மெய்யுரக் கூறலும் (தொல். கள. 11) எனவரும் விதிகொள்க.
50-54:
புகார்முகம்..............................கொடிக்கே
(இ-ள்)
உயிரினும் நுனித்த அஅ உருக்கொடு-என்னுடைய உயிரினுங்காட்டில் பெரிதும் நுட்பமான அந்த
அந்த
|