பக்கம் எண் :

120 திருமுறைத்தலங்கள்


     “மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை
      கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
      ஒட்டிட்ட பண்பின் உருத்திரப்பல் கணத்தார்க்கு
      அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.”  
                                           (சம்பந்தர்)

    “மண்ணினிற் பிறந்தார் பெரும்பயன் மதிசூடும்
     அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்
     கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டார்தல்
     உண்மையாம் எனின் உலகர்முன் வருகென உரைப்பார்.”
                                 (பெ.புரா.திருஞான’ புரா)

    “குயிலொத்திருள் குஞ்சி கொக்கொத் திருமல்
     பயிலப் புகாமுன்னம் நெஞ்சே - மயிலைத்
     திருப் புன்னையங்கானல் சிந்தியாயாகில்
     இருப் பின்னை அங்காந் திளைத்து.”
                                  (ஐயடிகள் காடவர்கோன்)

    அயிலொத் தெழுமிரு - விழியாலே
             அமுதொத் திடுமரு - மொழியாலே
    சயிலத் தெழுதுணை - முலையாலே
             தடையுற் றடியனு - மடிவேனா
    கயிலைப் பதியரன் - முருகோனே
             கடலக் கரைதிரை - யருகேசூழ்
    மயிலைப் பதிதனி - லுறைவோனே
             மகிமைக் கடியவர் - பெருமாளே.
                                 - ‘பாற்காட்டும்

   ஆர்த்தி பெற்றமாது மயிலாய்ப் பூசித்தார் மயிலைக்
      கீர்த்தி பெற்ற நல்வேத கீதமே.         (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. கபாலீஸ்வரர் திருக்கோயில்
     மயிலாப்பூர் - சென்னை - 600 004.