பக்கம் எண் :

177

 

கெடுக்குந ரடர்ந்துபல் கேடு சூழினு
நடுக்குறு நோய்பல நலியு மேனுங்கை
எடுக்குநர்க் கிறையரு ளிலங்கு மாறுபோல்
உடுக்கணம் விளங்கின வும்ப ரெங்குமே.      

6
     
 

மருட்டுபுன் மாக்கள்செய் வஞ்சப் போதக
இருட்டுறு மிருதயத் துணர்ச்சி யேய்ந்திட
அருட்டகு குரவர்மெய் யன்பி னாலகந்
தெருட்டுபோ தனையெனத் திகழ்ந்த தாரகை.   

7
     
 

ஆன்றபே ரகல்விசும் பணவி யெங்கணு
மீன்றிகழ்ந் தொளிர்வன விட்பு லத்துநங்
கோன்றிரு நந்தனங் குலவி ஜோதிய
வான்றருக் குலம்பொலி மலரை மானுமே.      

8
     
 

சோதனைக் கிடைந்திடாச் சூர சேனன்மெய்
வேதிய னெனநனி வியந்து மேம்படு
தூதர்தூ வியமலர்த் தொகுதி போலுமால்
மீதுறத் திகழ்ந்திடை மிளிருந் தாரகை.       

9
     
 

அடங்கின விலங்குபுள் ளடவி யார்ப்பொலி
அடங்கின பல்லியத் தணிகொள் பேரிசை
அடங்கின பணிமுறை யகில காரியம்
அடங்கின பொறிபுல னவித்த யோகிபோல்.   

10
     
 

இத்திற முன்னிசி யிருட்டொ டேகிய
வித்தக வேதியன் விரைந்து போயெழிற்
சத்திரப் புறக்கடைத் தலையைக் கிட்டினான்
அத்தகு காவல னாரை நீயென்றான்.          

11
     
 

நாசதே சத்துளே னயந்து நாடொறும்
பாசவெவ் வினைத்தொழில் பயின்ற பாமர
நீசன்முற் பெயரவ பத்த னின்மல
ஈசனா ரருள்பிடித் திழுத்த திவ்வழி.        

12
     
 

வந்தன னுபாதிமா மலையின் மீதுள
நந்தனத் திருந்துயி னயந்து நன்மதி
சிந்தினே னதுபல தீங்கு மோசமுந்
தந்ததா லிருள்வழி தவித்து வந்தனன்.       

13