|  
             (பொ 
        - ரை) ஆதிமுதலிருந்த மெய்யான திருவாக்காகவும்  
        ஒளியாகவும் இவ்வுலகத்துக்கு வந்தவரான காதல் மைந்தனைக்  
        கருணையினாற் தந்து பூதலத்திற்கு இரட்சிப்பைப் புதுப்பித்துண்டாக்கிய  
        பரமதந்தையின் பாதத்தை நமது சிரசிற்கு அலங்காரமாக்குவாம்.
             (வி 
        - ரை) திருவாக்கென்றது ஆதியில் தேவனோடிருந்ததும்  
        தேவனாயிருந்ததுமான வார்த்தையை. ஒளி என்றது இவ்வுலகத்தை மூடிய  
        அஞ்ஞான அந்தகாரத்தை ஒழித்து தேவஞானத்தை உதிப்பிக்கின்ற  
        ஞானசூரியனாகிய எம்பெருமானை. இது கலிவிருத்தம். வாய்பாடு : - மா  
        -விளம் - விளம் - விளம்.
        
       
         
          |     | 
           
                            வேறு 
                 
              கன்னி 
              பாலனாய்க் காசினி தனிலவ தரித்து  
              மன்னு ஜீவகோ டிகளெலாம் வான்கதி மருவத்  
              தன்னு யிர்ப்பரித் தியாகமுஞ் சிலுவையிற் றந்த  
              என்னு பாசனா மூர்த்தியை யஞ்சலித் திடுவாம். 5  
            | 
         
       
            (பொ 
        - ரை) கன்னிமரியாளின் பாலகனாய் இந்த உலகத்தில்  
        அவதரித்து, நிலைபெற்ற ஜீவகோடிகளெல்லாம் விண்ணுலகக்கதியைப்  
        பெறும்படிக்குத் தன் ஜீவனையும் பலியாகச் சிலுவையிற்கொடுத்த எனது  
        வழிபடுதெய்வமாகிய இரக்ஷண்ய மூர்த்தியை அஞ்சலிசெய்வாம். 
             (வி 
        - ரை) முதல் நான்குபாட்டாலும் திரியேகத்துவத்தின் முதல்  
        அம்சமாகிய பிதாவை வணங்கியவர் மேல் வரும் இரண்டு பாடல்களாலும்  
        இரண்டாம் அம்சமாகிய குமாரனை ஸ்துதிக்கின்றார். அஞ்சலித்தல் என்பது  
        சிரமேல் கரந்தூக்கிக் கைகூப்பித் தொழுதல். இப்பாடல் கலிநிலைத்துறை. 
       
         
          |     | 
           
                         வேறு 
                 
              வானமும் 
              பூமியும் மகிழ்கொண் டோங்கிட  
              ஞானமு நன்மையு நனிசி றந்திட  
              ஊனமும் பாவமு மொழியத் தோன்றிய  
              தீனர க்ஷகன்பதஞ் சிந்தித் தேத்துவாம். 6 
            | 
         
       
           (பொ 
        - ரை) வானலோகமும் பூலோகமும் மகிழ்ச்சிகொண்டு  
        ஓங்கத் தக்கதாகவும், ஞானமும் நன்மையும் மிகுதியாகச்  
        சிறக்கத்தக்கதாகவும், குறைவும் பாவமும் ஒழியத்தக்கதாகவும்  
        இவ்வுலகத்தில் தோன்றிய, பல ஹீனரைக் காப்பாற்றும் இரக்ஷகனுடைய  
        பாதங்களைச் சிந்தனைசெய்து ஸ்தோத்திரிப்போமாக. 
        
       
         
          |     | 
           
                         வேறு 
                 
              சுருதியொளி 
              யகந்திகழ்த்தி யஞ்ஞான திமிரமறத்  
                   துரந்தெஞ் ஞான்றும்  
              ஒருதனி ரக்ஷணியவழித் துணையாகி யடியோமை  
                   யுய்யக் கொண்டு 
            | 
         
       
      
     |