|
எம்மதமு
மெய்ம்மதமெ னத்துணிபி சைக்கும்
நம்மதமு மம்மதமு நாட்டுமதம் யாவுஞ்
சம்மதமி லாதுபர லோகபதி தந்த
தம்மதமெய் யென்றுபுகல் சாதுரிய தர்க்கன்.
|
24 |
|
|
|
|
மாயபிர
பஞ்சமக ராஜனைம திக்கான்
தேயமுறை யைத்தழுவு சீர்மைசிறி தில்லான்
மேயவுல கத்தவரொ ழுக்கினைவி ரும்பான்
ஆயகுல கேத்திரம றிந்துறவு செய்யான்.
|
25 |
|
|
|
|
அண்டர்பெரு
மானுலக டுக்குநெறி யென்று
கண்டநெறி புக்கதுதன் னோடுகழி யாமே
விண்டலம்வி ழுத்தழலின் வேமுலக மென்னா
மண்டலமு ழுக்கவுமி ழுக்கமுயல் வம்பன்.
|
26 |
|
|
|
|
மேன்மைதரு
நஞ்சமய மெண்டிசைவி ளக்குங்
கோன்மைகுண தோஷமுரை யாமைபுகழ் கொண்ட
பான்மைமதி யாதுபடு பாவியரென் றெள்ளும்
நோன்மையிலி மன்னுரிமை நோக்குகில னென்றான்.
|
27 |
|
|
|
|
ஆயிடைய
பத்தனும றப்பகைமுன் னின்று
நாயகவெ னைக்கனவி லுந்நணுக வொட்டாத்
தீயனக வாயிலறி யேன்பலதி றத்தும்
மாயநக ரத்தவரை வைதவம தித்தான்.
|
28
|
|
|
|
|
வைய்திகம
தத்தபிர மாணநம வெல்லாம்
பொய்திகழு நீரவவை போற்றியொழு கிற்பின்
மெய்திகழ்க கோளபதி மேலைநடு நாளில்
வெய்துநிரை யத்தெமைவி ழுத்துவது மெய்மை.
|
29 |
|
|
|
|
என்றினைய
குற்றம்விவ ரித்தெமையி ழித்த
தொன்றலவ நேகவித சாபமுமு ரைத்தான்
நின்றவிநி தானியறி நிண்ணயமி தென்றான்
துன்றிருள டைந்தமனை தோறுமுழல் தூர்த்தன்.
|
30 |
|
|
|
|
காளவிட
மன்னகடு நெஞ்சனது காலை
மூளனலெ னச்சினமு திர்ந்திறைவன் மொய்ம்பிற்
கேளனமு றப்பதித ரென்சொலின ரென்னாக்
கோளனைவி ளித்தறிவ கூறுகினி தென்றான்.
|
31 |