பக்கம் எண் :

472

  தன்னிரு தயத்தையே சார்ந்து நம்புவோன்
உன்னரும் பயித்தியோன் மத்த னென்றொரு
மன்னவ ஞானிசொன் மதித்துக் கொண்டவர்
பன்னருங் கொடுவிடப் பையென் றோர்வரால்.

43
   
  கருதுகென் றாரியன் கழறக் கேட்டலுஞ்
சுருதிதேர் பனவபொல் லாத துர்க்குணர்
இருதய நிலையெடுத் திசைத்த வாய்மையென்
ஒருதவ றிலாவித யத்துக் கொல்லுமோ.
44
   
  நன்றுள விதயமு நன்ன டக்கையும்
ஒன்றினுக் கொன்றுசான் றாகி யொத்தலான்
மன்றல்சேர் முத்திவீட் டின்பம் வாய்த்திடும்
என்றநம் பிக்கையு மெனக்குண் டோர்தியால்.
45
   
  வித்தக நவமணி விளைந்து மல்கிய
அத்தகு சுரங்கநல் லிதய மாகுமால்
பத்தெனும் விதிவிலக் கோம்பும் பண்புடைச்
சத்திய வொழுக்கமே சாற்று நன்னடை.
46
   
  வேதிய மேலினி விளம்பம் மிருத தென்
சாதக பாதகஞ் சாதுவின் மூலபக்
கோதிலாக் குணத்தனீ குறித்த கூற்றினிற்
பாதக முளதது பகரக் கேட்டியால்.
47
   
  ஒள்ளிய விதயத்தி னொழுங்கு முள்ளுறு
கள்ளவல் லிதயத்தின் கபடுங் காட்டுமால்
உள்ளதை யுள்ளவா றுரைக்கத் தக்கநம்
வள்ளலா ருரையெனு மாற்றுக் கோடுகல்.
48
   
  வைதிக நூற்பிர மாண மாட்சிநூன்
மெய்திக ழவிரொளி விளக்கை யோம்பிடார்
பொய்திக ழிருதயப் புணர்ப்பை நம்பிவீண்
ஐதிக விருட்பிழம் படைந்து மாய்வரால்.
49
   
  நன்றுசெய் பவனிலை நரசி ருட்டியில்
ஒன்றிய நீதிமா னொருவ னும்மிலை
என்றுமெ லாநரஹிருத யங்களுங்
கன்றிய தீவினைக் கழக மென்பவே.
50