பக்கம் எண் :

475

  சொந்தநற் கிரியையாற் றொகுத்த புண்ணியச்
சிந்தையி னீதிமா னாகத் தேறினை
அந்தரத் தாமரை யலர்த்திக் காட்டிய
விந்தையே போலுமால் விகட வேடத்தோய்.

67
   
  நீசராம் பாவரை நீதி மான்களாய்
மாசறச் செயும்விசு வாசம் வல்விதி
வீசுதண் டனைக்கிடை விலக்கி ஜேசுவின்
ஆசறு புண்ணிய வடைக்க லத்திடும்.
68
   
  பாசமார் கிரியையிற் பழுத்த வுன்விசு
வாசவைக் கூளமோ தீர்வை வைகலில்
ஈசன்கோ பாக்கினிக் கெதிர்நின் றுய்ப்பது
பேசுமாக் கினையுனைப் பிடித்தி டாதுகொல்.
69
   
  நினதுகீழ்ப் படிதலை நீதி யாக்கவே
புனிதநீ தாதித்தன் போந்த தாமெனின்
மனிதர க்ஷணையெலா மாநு வேலருட்
டனிதத்தா லன்றுநந் தருமத் தாயவாம்.
70
   
  இப்பெரு மருள்பிடித் திழுக்க வேழைநீ
துப்புர வுளையெனத் துணிந்துன் னீதியாந்
தப்பறைக் கிடங்கரிற் றலைகி ழக்குறக்
குப்புறு கின்றனை கூறக் கேட்டியால்.
71
   
  இத்தரை மனுக்களுக் கிறுத்த தண்டனை
அத்தனை யுஞ்சுமந் தரிய பாடுகள்
உத்தரித் துயிர்ப்பலி யுதவிக் கற்பனை
பத்தையுந் தழுவினர் பரம னோர்சுதன்.
72
   
  ஈதுகாண் மெய்விசு வாச லக்ஷயம்
ஆதலி னிதையுளத் தாக்கி யாண்டகை
நீதியைப் புனைந்திவ ணிலவு வாயெனில்
ஜோதிநாட் டுயர்பதஞ் சொந்த மாமென்றான்.
73
   
  இச்சையாம் புரவியை யிழுத்திங் குய்ப்பதற்
குச்சித கிரியையே கலின முண்மையிற்
குச்சித மாமெனிற் குவல யம்மெலாம்
நிச்சயங் கெடுமென நிறுவ வேண்டுமோ.
74