பக்கம் எண் :

138 வலம்புரி ஜான்


O

 

எது நடந்தாலும்

ஆழ்ந்து அறிகிற

அற்புதத் திறனும் ...

சாம்பல் முறுக்கென

சரித்திரம் நீட்டும்

நினைவு ஆற்றலும் ...

ஒன்றைப் பற்றிக்

கருத்துச் சொன்னால்

சாலமோன் ஞானி

சார்ந்து கேட்கிற

உயர்வகை ஞானமும் ...

 

O

 

பாம்பும் அடிபட

கோலோ முறிபடாமல்

கொண்டு செலுத்துகின்ற

நாவின் நயங்களும் ...

 

O

 

மனம், மொழி, மெய்யால்

தீதை அறுக்கும்

திருந்திய திறனும் ...

 

O

 

நானிலத்தவர்கள்

நடத்தைச் சான்றிதழ்

பெறுவதற்கேற்ற

பேரிடம் ஒன்று உண்டெனில்

இதுதான் என்று