பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்171


நத்தையைப் போல

அண்ணலாம் முகம்மது

மலைக் குகைக்குள்ளே

மறைந்தே இருந்தார்.

தன்னை அகழ்ந்தார்.

அலை வேறு, கடல் வேறு ஆகாமல்

ஈர விரிப்பாய்

இன்றவர் ஆனார்.

 

O

 

இரவு நின்று கொண்டே நடந்தது ...

இமைப் படுதாக்கள்

இறக்கப்பட்டன !

காற்றின் பற்கள்

குளிரில் ஆடின !

 

O

 

இதயத்தை இழந்து விட்ட

பாலை வனமோ

இடது பக்கமாகத்

திரும்பிப் படுத்தது.

 

O

 

அப்போது

வானம்

பூமிக்கு

வளைகாப்பு நடத்தியது.