மேயமுடியாமல் போயிற்று
திசைகளைக் கைத்தலத்தில்
வைத்துக் காப்பாற்றுகிறவனே !
ஒரு
தேங்காய்ச் சிதறலை
எடுப்பதா வேண்டாமா என்று
காத்திருந்தே வயதாகிப் போகிற
காகமாக மாத்திரம் என்னை
ஆக்கிவிடாதே !
உனது கூண்டு என்றால் ...
அதில் -
கிளியாகக் கிடப்பதே
எனக்குச்
சுதந்திரம் !
உனது இரவாக இருந்தால் ...
அதில் -
மின்மினியாகத் திரிவதே
எனக்கு
இலக்கியம் !
O
இறைவா !
காலைச் சொறிவதற்காகக்
கீழே குனிகிறவர்களைக் கூட
வீழ்ந்து போனவர்களின் பட்டியலில்
வீடுகட்டி அமர்த்தி விடுகிறார் |