பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்241


குதிரைக் குளம்புகளைப்

பின்பற்றி போகிற

தூசிப்படலத்தைப் போல...

எதிரிகள் அவர்களைத்

தொடர்ந்தார்கள்!

 

O

 

மீண்டும்

கப்பல் ஒன்று

அவர்களை அமர்த்திக் கொண்டு

அசைந்து சென்றது.

 

O

 

நாற்றங்காலிலேயே

நஞ்சு கலப்பதில்

குறைசிகள் இருவர்

குறியாய் இருந்தனர்!

நாடுவிட்டு இங்கு நகர்ந்தனர்...

 

O

 

அரண்மனைப் புறாக்களுக்கு

அலகு கொள்ளாத பரிசுகள் தந்து...

அரசனை வளைக்க

ஆவன செய்தனர்!