தோள்களின் நடுவில் ‘முஹாரே நுபுவத்தை’ பதித்துப் பறந்தனர் ! O அதிசயம் இதனை பக்கத்தில் பார்த்ததால் ஹலீமா பிள்ளைகள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இல்லம் வந்ததும் இதுவே பேச்சு ... கணவனும் மனைவியும் கடுகி விரைந்தனர் ... மார்போடு அணைத்தனர் ... அச்சத்தால் ஹலீமா அடிவரை நடுங்கினாள் ! O நரம்புக் கால் வாய்களில் நகர்ந்த குருதியோ ... சொன்னால் போகலாம் என்றே கருதி சுருண்டு படுத்தது ! O அவர்களின் மயிர்க்கால்களில் ... துணிச்சல் - அரைக்கம்பத்தில் அடங்கிப் பறந்தது ! |
|
|