பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்95


முகம்மது

அருகிருக்க வேண்டும் !

 

O

 

இப்படியாக இனியவர் முகம்மது

இமயம் போல வளரும் நாளில்

அதிசயம் ஒன்று

அங்கே நடந்தது ...

ஆண்டவன் கருணை

அன்று நிகழ்ந்தது ...

 

O

 

மக்கமா நகரம்

மழை இல்லாமல் ...

சுக்கைப்போல் உலர்ந்து வெந்தது !

 

O

 

பொக்கை வாய்க்குள்ளும்

உமிழ்நீர் சுரக்க

பொழுது பார்த்தது ...

அப்படி வறுமை !

 

O

 

அபுதாலீஃப் உள்ளத்துள்ளே

ஊற்று விழித்தது ...

முகம்மதுவை அவர்

அழைத்துப்போனார் ...

மழைக்காய் வேண்டு

மகனே என்றார் ...

இறைவனை வேண்டினார்

முகம்மது அன்று ...