பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்99


முட்டுவார்கள் ...

உலகத்தில் தாம் மட்டும்

ஆண் என்றாகி

உள்ள உயிர் எல்லாமும்

பெண்ணே ஆகி

விரல் இடுக்கு இடைவெளிக்கும்

இடம் இல்லாது

இன்பத்தில் இணைந்திருக்க

எண்ணுவார்கள் ...

 

O

 

முகம்மதுவோ ...

நேராக நிற்கும்

தாயின் வயிற்றில்

தலைகீழாய் தொங்கும்

குழந்தையைப் போல ...

இளைய சமுதாயத்தில்

ஒருவராய் இருந்தும்

அனைத்திலும் அண்ணல்

வேறுபட்டார்கள் !

 

வேறுபட்டார் முகம்மது !

 

O

 

மற்ற இளைஞர்கள்

ஆடிப் பாடுவர் ...

மறையவர் முகம்மது

தன்னைப் புரட்டுவார் !