காதல் யாத்திரை இயல்-32 "தன்னுடை நாட்டின் கடமையை விடுத்துத் தான்வர இயன்றிடா தெனவே மன்னவர் தைமூஸ் விரும்பிடில், பெண்ணை மணமுடித் தனுப்பிடில் ஏற்பேன் !" என்பதாய் மிசுரின் அமைச்சர் அஜீஸு இயம்பிய யாவையும் தூதர் சொன்னதும் தைமூஸ் சுலைகாவை அவர்க்குச் சுபமணம் செய்திடத் துணிந்தார் ! மன்னரின் அறிவிப்பு : "அருங்குணம் படைத்த மிசுரின்நல் லமைச்சர் அஜீஸும் என்திருமகள் சுலைகா இருமனம் பொருந்தி ஒருமன மடைந்து இல்லறம் நடத்திடத் துணிந்தார் ! திருமணம் புரிந்து சுலைகாவை அனுப்பத் திரண்டிடு வீர்!" எனும் செய்தி நறுமணம் எனவே எங்கணும் பரப்ப நவின்றனர் மன்னர் தைமூஸே ! மக்களின் மகிழ்ச்சி : எங்கிலும் சுலைகா திருமணச் செய்தி எட்டிடக் குடிகளெல் லோரும் தங்களின் சொந்தத் திருமண மெனவே தனிப்பெரும் மகிழ்ச்சியே அடைந்து |