பக்கம் எண் :

162


தூது அனுப்புதல்

இயல்-35

 

உள்ளத்தின் அடித்த ளத்தே

      ஊற்றெனச் சுரக்கும் இன்ப

வெள்ளத்தைக் கடந்து வாழ்வின்

      வெற்றியைக் காண, ஐயப்

பள்ளத்தை விட்டு மீண்டு

      நம்பிக்கை பற்றிச் செல்லச்

சொல்லிடும் நெஞ்சுணர்வில்

      துயர கற்றினள் சுலைகா.

 

காதலர்க் குரிய கற்பைக்

      காத்திடக் கூடு மென்ற

ஆதர வளிப்ப தற்கே

      அமைச்சரும் அகன்றார் போன்று

வேதனை மாற்றி வான

      வெளியினை நோக்க, மங்குல்

சீதள மதியைச் சூழச்

      சிரித்தது சுலைகா எண்ணம்!

 

மேகத்தை வேண்டுதல் :

"ஒளிமிகும் மதிமு கத்தை

      உரிமையாய்த் தழுவி உள்ளம்

களிப்புறக் காதல் செய்யக்

      கருதிடும் முகிலே, வான

வெளியினில் உலவும் நீயென்

      மீதினில் இரங்கி எங்கோ

ஒளிந்துள காத லர்க்கென்

      உளத்துடிப் புரைத்தி டாயோ?"