|
பெ
பொ-ரை :
என் உயிரானது, செவிகள்
வயிறு நிறையும்படியாக நின் கீர்த்தியின் உருவமான கனியென்னும் கவிகளை அவ்வக் காலங்கட்குரிய
பண்களாகிய தேனைக்கலந்து அனுபவித்துப் பூமியின்மேலே அழகிய நீண்ட சக்கரத்தையுடைய உன்னையே
இடைவிடாது ஆதரியாநின்றது.
வி-கு :
‘கனி என்னும் கவிகளே
காலம் பண் தேன் உறைப்பத்துற்று’ என்னும் பகுதியை உற்று நோக்கல் தகும். அறிவு இன்றி -
இடையீடில்லாமல். ‘எனதாவி ஆதரிக்கும்,’ என மாறுக.
ஈடு :
ஆறாம் பாட்டு. 1‘என்னுடைய
உயிரானது உன்னுடைய கீர்த்தியைத் தன் செவிகளாலே கேட்க ஆசைப்படாநின்றது,’ என்கிறார்;
‘ஆயின், உயிருக்குச் செவி உண்டோ?’ எனின், கன்னமிட்டுக்கொண்டும் கேட்க வேண்டும்படி அன்றோ
பகவானுடைய கீர்த்தி இருப்பது?
செவிகளால் ஆர -
செவிகள் வயிறு நிறையும்படியாக. நின் கீர்த்திக் கனியென்னும் கவிகளே - கீர்த்தி
உருவமாய்க் கனி போலே இருக்கிற கவிகளை. ‘கவி கனிபோல் இருக்கையன்றிக்கே, இனிமையின் மிகுதியாலே
கனி கவியாயிற்று,’ என்கிறார். காலம் பண் தேன் உறைப்பத் துற்று - செருக்கராய் இருக்கும்
அரசபுத்திரர்கள் நல்ல பழங்களைத் தேனிலே தோய்த்து உண்ணுமாறு போன்று, உன் கீர்த்தியாகிற
கனிகளைக் 2காலங்கட்கு அடைத்த பண்களாகிற தேனிலே, அத்தேன் மிஞ்சும்படி கலந்து
அனுபவித்து.
____________________________________________________
1. செவிகளால் ஆர
நின் கீர்த்திக் கனி ஆதரிக்கும் எனது ஆவியே,’
என்பதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார்.
கன்னமிடுதல்,
சிலேடை.
2. ‘காலங்கட்கு
அடைத்த பண்’ என்றது, ஒவ்வொரு காலத்திற்கும் பண்களைப்
பாகுபடுத்தி வரையறை செய்துள்ளார்கள்;
அதனைத் திருவுள்ளம் பற்றி
அருளிச்செய்தபடி, பகற்காலத்திற்குரிய பண்கள்: புறநீர்மை, காந்தாரம்,
பியந்தைக் காந்தாரம், கௌசிகம், இந்தளம், தக்கேசி, சாதாரி, நட்டபாடை,
நட்டராகம்,
பழம்பஞ்சுரம், பஞ்சமம், காந்தார பஞ்சமம் என்னும்
பன்னிரண்டுமாம். இராக்காலத்திற்குரிய
பண்கள்: தக்கராகம், பழந்தக்கராகம்,
சீகாமரம், கொல்லி, கொல்லிக்கௌவாணம், வியாழக்குறிஞ்சி,
மேகராகக்குறிஞ்சி, அந்தாளிக்குறிஞ்சி, குறிஞ்சி என்னும் ஒன்பதுமாம்.
இவ்விருவகைக் காலத்திற்கும்
பொதுவான பண்கள்: செவ்வழி, செந்துருத்தி,
தாண்டகம் என்னும் மூன்றுமாம். வேறு வகையாகவும்
பிரித்துக் கூறுவர்.
|