|
New Page 1
போன்ற முரசங்கள் வீட்டின்
முன்னிடத்திலே ஒலித்துக்கொண்டிருக்க வீற்றிருந்த சக்கரவர்த்திகள், (அந்நிலை கெட்டு)
பொடியோடு சேர்ந்த தூளியாய்ப் போவார்கள்; ஆகையாலே வாசனை சேர்ந்திருக்கின்ற திருத்துழாயினைத்
தரித்த முடியினையுடைய கண்ணபிரான் திருவடிகளை விரைவில் நினையுங்கோள்’ என்பதாம்.
வி-கு :
‘முடியினராகித் தொழ இருந்தவர்’ என்க. ‘இருந்தவர் துகளாய்ப் போவர்’ என முடிக்க; ‘ஆதலின்,
கழல்கள் நினைமின்’ என்க. நொக்கு என்பது, விரைவுக் குறிப்பினைக் காட்டுகின்ற இடைச்சொல்.
ஈடு : மூன்றாம்
பாட்டு. 1இராசாக்கள், தங்கள் காலிலே விழுந்து கிடந்தால் அதனை ஒரு பொருளாக நினைத்து
நோக்காத மதிப்பினையுடையவர்கள், 2‘ஒரு சேதநன் - மகன், என்று எண்ண முடியாதபடி
மதிப்பு அறுவர்கள் என்கிறார்.
அடிசேர் முடியினர்
ஆகி - தன்னோடு ஒக்க ‘அரசு’, என்று இருந்த இராசாக்கள் தன் காலிலே சேர்க்கப்பட்ட முடியையுடையராய்.
அரசர்கள் - இராசாக்கள். தாம் தொழ - தாங்கள் அறிந்ததாகத் தொழும் இத்தனை போக்கி,
‘இவன் இப்படித் தொழுதான்’ என்னும் நினைவு அவனுக்கு இல்லை’ என்பார், ‘தாம் தொழ’
என்கிறார். 3‘இன்று ஸ்ரீபாதத்திலே தலை தாக்கத் தொண்டன் இடப்பெற்றோம்,’ என்று
இவன்
_____________________________________________________
1. ‘அடிசேர் முடியினராகி
அரசர்கள் தாம் தொழ இருந்தவர் பொடிசேர்
துகளாய்ப் போவர்கள்,’ என்பதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. சேதநன் - அறிவையுடையவன்.
சேதநம் - அறிவு.
‘பல்லான்ற
கேள்விப் பயன்உணர்வார் வியவும்
கல்லாதார்
வாழ்வ தறிதிரேல் - கல்லாதார்
சேதன மென்னும்அச்
சேறுஅகத்து இன்மையால்
கோதென்று கொள்ளாதாம்
கூற்று.’
என்பது நாலடியார்.
3. ‘கண்டிலன்
என்னை என்பார்; கண்டனன் என்னை என்பார்;
குண்டலம் வீழ்ந்த தென்பார்;
குறுகரி தினிச்சென் றென்பார்;
உண்டுகொல் எழுச்சி என்பார்;
ஒலித்தது சங்க மென்பார்;
மண்டல வேந்தர் வந்து
நெருங்கினர் மயங்க என்பார்.’
என்ற கம்பநாட்டாழ்வார்
திருவாக்கு (பால காண். எழுச்சிப். 75) இங்கு
ஒரு புடை ஒப்பு நோக்கலாகும்.
|