|
ந
நீலமணி போன்ற நிறத்தையுடையவனே!
நீ என்னை அங்கீகரித்தருளவேண்டும்; அடியேனைக் கலங்கும்படி செய்யாதொழிய வேண்டும்,’ என்கிறார்.
வி-கு :
‘வாங்கு நீர்’ வியாக்கியானம் பார்க்க. தகர்ப்புண்ணல் -வருத்தத்தை அடைதல்; அழிதல். மறுக்கேல்
- கலங்கப்பண்ணாதே.
ஈடு :
ஐந்தாம் பாட்டு. ‘பிறப்பு மூப்பு இறப்பு முதலியவைகளாலே நோவுபடுகிற இம்மக்கள் நடுவினின்றும்,
இவை நடையாடாத தேசத்திலே அழைத்துக்கொண்டருள வேண்டும்,’ என்கிறார்.
வாங்கு நீர் மலர்
உலகில் - இவ்வருகு உண்டான காரியவர்க்கத்தையடையத் தன் பக்கலிலே வாங்காநின்றுள்ள நீரிலே
உண்டாய் விரிவடைந்துள்ள உலகத்திலே. 1காரியங்கள் எல்லாம் காரணத்திலே இலயமாகக்
கடவன அன்றோ? 2இலயத்தை முன்னிட்டு அன்றோ படைப்பு இருப்பது? அன்றிக்கே,
‘நீராலே சூழப்பட்டதும் திருநாபிக்கமலத்தில் பிறந்ததுமான உலகத்திலே’ என்னுதல். வாங்கு -
வளைந்த. திரிவனவும் நிற்பனவும் -தாவரங்களும் சங்கமங்களும், ஆங்கு உயிர்கள் - அந்த அந்தச்
சரீரத்திலேயுள்ள ஆத்துமாக்கள். அன்றிக்கே, ‘நிற்பனவும் திரிவனவுமான உயிர்கள்’ என்று கூட்டித்
‘தாவரமாகவும் சங்கமமாகவும் இருக்கின்ற உயிர்கள்’ என்னலுமாம். ‘ஆங்கு’ என்பதனை, மேலே
வருகின்ற ‘வாங்கு எனை நீ’ என்றதனோடு கூட்டுக.
பிறப்பு இறப்பு பிணி
மூப்பால் தகர்ப்புண்ணும் - பிறப்பு இறப்பு மரணம் முதலியவைகளாலே நெருக்குண்ணாநிற்பர்கள் சமுசாரத்தில்
இருக்கும் நாள்கள் முழுதும். இதன்மேல் வெந்நரகம் - இதற்குமேல் போனால் கொடிதான நரகம்.
‘இங்கு இருந்த நாள் 3மூலையடியே
_____________________________________________________
1. ‘தண்ணீரோ, எல்லாவற்றையும்
வாங்குகிறது?’ என்ன அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘காரியங்கள் எல்லாம்’ என்று தொடங்கி.
தண்ணீர்,
காரணம்; பூமி, காரியம். தண்ணீரினின்றும் பூமி உண்டாயிற்று என்ற சிருஷ்டி
முறையை நினைவு
கூர்க.
2. ‘சிருஷ்டியைச்
சொல்லி, பின்பு அழித்தலைச் சொல்ல வேண்டாவோ?’
என்ன, ‘இலயத்தை’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
3. மூலையடி
- தன் இச்சையின்படி.
|