|
New Page 1
பொ-ரை :-
ஆழ்ந்த கடலையும் பூமியையும் ஆகாயத்தையும் மூடிக்கொண்டு பெரிய விகாரத்தையுடையதாய் ஒப்பற்ற
வலிய இருள் மயமான இரவாயே நீண்டுவிட்டது; நீலோற்பல மலர்போன்ற நிறத்தை யுடையவனாகிய என்
கண்ணபிரானும் வருகின்றான் இலன்; பாவியேனாகிய என்னுடைய நெஞ்சமே! நீயும் அநுகூலமாய்
இருக்கின்றாய் இல்லை; ஆதலால், இனி என் உயிரைக் காப்பவர் யார்? என்கிறாள்.
வி-கு :-
காலம் மூடி விகாரமாகி இரவாய் நீண்டது என்க. வண்ணனாகிய கண்ணன் என்க.
ஈடு :-
இரண்டாம் பாட்டு. 1இந்நிலையில் ஸ்ரீ கிருஷ்ணனும் வருகின்றிலன்; நெஞ்சமே! என்னுடைய
சம்பந்தத்தாலே, நீயும் அவனைப் போன்று பாங்கு அன்றிக்கே ஒழிந்தாய் என்கிறாள்.
கண்ணனும் வாரான்,
நெஞ்சமே! நீயும் பாங்கு அல்லை ஆவி காப்பார் இனி யார் - உதவுமவன் உதவிற்றிலன், நெஞ்சும்
பாங்கு அன்றிக்கே ஒழிந்தது, இனி, காப்பவர் யார்? ஆழ்கடல் மண் விண் மூடி - அளவிட முடியாததான
கடல், எல்லாப் பொருள்களுக்கும் இடம் கொடுக்கக் கூடியதான பூமி, அந்தப் பூமிக்கும் இடம்
கொடுக்கக்கூடியதான ஆகாசம் இவற்றை முழுதும் மறைத்து. 2காரணப் பொருள்களைக் காரியப்
பொருள்களிலே ஒன்று மறைத்தது. மா விகாரமாய் - பின்னரும் அவ்வளவில் முடிவு பெறுவதாய்
இருக்கிறது இல்லை, மஹா விகாரத்தையுடைத்தாய்ப் பரமபதத்தையும் கணிசிக்கிறாப் போலே இரா நின்றது.
3விஸ்வரூபத்தைக் காட்டின சர்வசக்தி செய்வன எல்லாம் செய்யா நின்றது என்றபடி.
ஓர் வல் இரவாய்-4திருவாழியை இட்டுத் துண்டித்து உதவவரிலும் வர ஒண்
_____________________________________________________
1. “ஆழ்கடல் மண் விண் மூடி
. . . நீண்டதால்” என்றதனைக் கடாக்ஷித்து
‘இந்நிலையில்’ என்கிறார். ‘நெஞ்சமே! நீயும் . .
. பாங்கு அன்றிக்கே
ஒழிந்தாய்’ என்றது, அவனை நினைத்துத் தரித்துக்கொண்டிருக்கைக்கு, நீ
என்னதுவாய்
இருக்கிறாய் இல்லை; “என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார்”
என்கிறபடியே, நீயும் அங்கே ஒழிந்தாய்
என்றபடி.
2. காரணப்பொருள் - ஐம்பெரும்பூதங்கள்.
காரியப் பொருள்களிலே ஒன்று -
இருள்.
3. “காரணப்பொருள்களைக்
காரியப்பொருள்களிலே ஒன்று மறைத்ததற்கு ஒரு
திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘விஸ்வரூபத்தை’ என்று
தொடங்கி. சர்வசக்தி -
ஸ்ரீ கிருஷ்ணன்.
4. “வல்” என்பதன் பொருளை விளக்குகிறார். ‘திருவாழியை’ என்று தொடங்கி.
|