பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
172

திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானுடைய சிறப்பையுடைத்தான திருவடிகள் அல்லாமல் எத்தகையார்க்கும் வலிய உபாயம் வேறு ஒன்றுஇல்லை.

    வி-கு :-
உடம்பாய் உடம்பாய்க் கரந்தும் தோன்றியும் நின்றும் செய்தும் சேர்ந்த பிரான் என்க. பிரான் பாதம் அல்லால் வன்சரண் யாவர்க்கும் இல்லை என்க.

   
ஈடு :- ஏழாம்பாட்டு. 1எத்தனையேனும் ஞானமுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார்.

    பரஞ்சுடர்உடம்பாய்-2“திருமேனி ஒளிகளின்கூட்டம்” என்கிறபடியே, சுத்த சத்துவ மயமான அசாதாரண திவ்வியவிக்கிரகத்தையுடையனாய். அழுக்குப் பதித்த உடம்பாய் - முக்குணங்களுக்கு வசப்பட்ட உலகத்தையே உருவமாகவுடையனாய். கரந்தும் - இவற்றுக்கு அந்தராத்மாவாய்ப் புக்கு நிற்கச்செய்தே 3“எந்தப் பரமாத்மாவை ஆத்மா அறிகிறான்இல்லை” என்கிறபடியே, இவற்றுக்குத் தோன்றாத படி நின்று, இவற்றின் சத்தையை நோக்கியும். தோன்றியும் - 4காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்திருப்பார்க்குக் காணலாம்படி இராம கிருஷ்ணாதி அவதாரங்களைச் செய்தும். நின்றும் - நூறு ஆண்டுகள், பதினோராயிரம் ஆண்டுகள் நின்றும். 5அவ்விடங்களிலே, கைதவங்கள் செய்தும் - வஞ்சனைகள் பொருந்திய காரியங்களைச் செய்தும். அதாவது, அவதரித்து நிற்கச்செய்தே தன்படிகள் சிசுபாலன் முதலாயினார்கட்குத் தோற்றாதபடி செய்தும், தன்னை அடைந்தவர்கட்குத் தோன்றும்படி செய்தும் போந்தமையைத் தெரிவித்தபடி. விண்ணோர் சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்-6‘பிரமன்முதலாயினோர்’ தலைபடைத்த பிரயோஜனம் பெற்

 

1. “வரம்கொள் பாதமல்லால் இல்லை” என்பது போன்றவைகளைக்
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. “தேஜஸாம் ராஸி மூர்ஜிதம்”

  இது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 9 : 67.

3. “யம் ஆத்மா ந வேத”

  என்பது, பிருஹதாரண்யக உப.

4. தோன்றாமல் நிற்கிறவன் தோன்றுவது எதற்காக? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘காணவாராய்’ என்று தொடங்கி. இது திருவாய். 8. 5 : 2.

5. அவ்விடங்களிலே-இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களிலே.

6. “சிரங்களால்” என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார் ‘பிரமன்’ என்று
  தொடங்கி.