பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

இன

ஆறாந்திருவாய்மொழி - பா. 10

281

இன்றிக்கே இருந்த பின்பு அவன் தன்னை நமக்குத் தரும் என்று அறுதியிடுகிறார்.

    ஏறஅரு வைகுந்தத்தை அருளும் நமக்கு - ஒருவராலும் தம்முயற்சியால் அடைய ஒண்ணாதிருக்கிற ஸ்ரீவைகுண்டத்தை அவன் தானே தரப் பெற இருக்கிற நமக்குத் தரும். 1‘எல்லா வழியாலும் அவன் தன்மையை அறிந்து, ‘அதனைத் தரும்’ என்று இருந்தீரேயாகிலும், பெற இருக்கிற நம் படியைப் பாரானோ?’ என்னில், ஆயர்குலத்து ஈற்றிளம்பிள்ளை - நம்படி பார்க்க அறியாத இளைஞன். 2‘இளைஞனே! (சிசுபாலனுக்கு) நித்தியசூரிகளோடு ஒத்த இன்பத்தை அளித்தவன் ஆனாய்’ என்னக்கடவதன்றோ? ஈற்றிளம்பிள்ளை - 3‘ஈறான இளம்பிள்ளை’ என்றாய், மிக்க இளைஞன் என்றபடி. ஈறு -முடிவு. அன்றிக்கே, ஈன்றிளம்பிள்ளை என்றாய், ‘கற்றிளம்பிள்ளை’ என்றபடி. இரண்டாலும் அதி இளைஞன் என்றபடி. ஒன்றாய்ப் புக்கு - 4கம்ஸனும் பொய்யே அம்மானாய் ‘வில் விழவுக்கு’ என்று அழைத்து விட, இவனும் பொய்யே மருகனாய் அவற்றிற்கெல்லாம் தானே கடவனாக விருமகிப் போய்ப் புக்கானாயிற்று. அன்றிக்கே, ‘வில்விழவு’ என்று கொண்டு ஒரு வியாஜத்தை இட்டுப் போய்ப் புக்கு என்னுதல்.

    மாயங்களே இயற்றி - ஆயுதச்சாலையிலே புக்கு ஆயுதங்களை முரிப்பது, 5ஈரங்கொல்லியைக் கொன்று பரிவட்டம் சாத்துவது, குவலயாபீடத்தின் கொம்பை முரிப்பது, மல்லரைக் கொல்லுவது ஆன ஆச்சரிய காரியங்களையே செய்து. இயற்றுதல் - செய்யத்

_____________________________________________________________________

1. மேலிற்பத்துக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘எல்லாவழியாலும்’ என்று
  தொடங்கி.

2. நம் குற்றத்தை அறியாதவனாக இருப்பான் என்பதற்கு உறுப்பாக, அவன்
  இளமையைச் சொல்லுகிறதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘இளைஞனே’ என்று
  தொடங்கி.

        ‘முக்த ஸாயுஜ்யதோபூ:’ என்பது, ஸ்தோத்ர ரத்நம், 63.

3. ‘ஈறு என்று எல்லையாய், ‘பிள்ளைத்தனத்தில் எல்லையானவன்’ என்னுதல்;
  ‘ஈன்றண்ணிய பிள்ளை’ என்னுதல்’ என்பது, இருபத்து நாலாயிரப்படி.

4. ‘ஒன்றாய்ப் புக்கு’ என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்,
  ‘கம்ஸனும்’ என்றும், ‘வில்விழவு’ என்றும் தொடங்கி.

5. ஈரங்கொல்லி-வண்ணான்.