21. நாதன் கோயில் என்ற திருநந்திபுரவிண்ணகரம்
தம்பியொடு தாமொருவர் தந்துணைவி காதல் துணை யாக முனநாள் வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது மேவு நகர்தான் கொம்புகுதி கொண்டு குயில் கூவ மயிலாலு மெழிலார் புறவு சேர் நம்பியுறை கின்ற நகர் நந்தி புர விண்ணகரம் நன்னு மனமே (1443) பெரிய திருமொழி 5-10-6 |
மரக்கொம்புகளில் தமது தோகைகளை அசைத்து அசைத்து குயில்கள்
கூவ, மயிலினங்கள் ஆடிக்கொண்டிருக்க எழில் நிறைந்த பொழில் சூழ்ந்த
சோலைகளால் சூழப்பட்ட இந்த நந்திபுர விண்ணகரத்தில்தான் தன்
மனைவியொடும் தம்பியொடும் கொடிய கானகமெல்லாஞ் சுற்றித்திரிந்த
ராம்பிரான் உறைகிறான் என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம்
கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது.
நாதன் கோவில் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்
கும்பகோணத்திலிருந்து கொருக்கை என்னும் ஊருக்கு வந்து அங்கிருந்து 11/2
மைல் நடத்தும் இத்தலத்தையடையலாம்.
வலங்கை மானிலிருந்தும் இதே தொலைவுதான்.
வரலாறு
பவிஷ்ய புராணம் (பவிஷ்யேர்த்ரபுராணம்) 7 அத்தியாயங்களில் பிரம்ம
நாரதஸம்வாதம் என்ற பகுதியில் பிரம்மனுக்கும் நாரதனுக்கும் நடந்த
உரையாடலாக இத்தலவரலாறு பேசப்படுகிறது.
இந்த நந்திபுர விண்ணகரம் துவாபர யுகத்திலேயே நாதன் கோவில்
என்றே அழைக்கப்பட்டது. “நாதன் உறைகின்ற நந்திபுர விண்ணகரம்”
என்பதே திருமங்கையாழ்வாரின் பாடலிலும் பயின்று வந்துள்ளது.
பாற்கடலில் எம்பெருமானின் பாதாரவிந்தங்களையே பற்றிக்
கொண்டிருந்த பிராட்டிக்கு தேஜஸ் பொருந்திய எம்பெருமானின் திருமார்பைக்
கண்டு, அவ்விடத்திலேயே