பக்கம் எண் :

96

     கலியுகத்தில் பத்மாவதியை மணந்துகொள்வதாக எம்பெருமான்
இராமாவதாரத்தில் வாக்கு கொடுத்திருந்தார். இந்த பத்மாவதி தேவியே
இராமாவதாரத்தில் வேதவதி என்னும் பெயர் பூண்டிருந்தாள்.

     (இவ்வரலாற்றினை திருப்பதி ஸ்தல வரலாற்றில் தெளிவாகக் காணலாம்)

     ஹோல்காப்பூரில் மறைந்திருந்த லட்சுமி, நாரதர் வாயிலாக
பத்மாவதியை மணந்த நிகழ்ச்சியை அறிந்து மிக்க சீற்றத்துடன் திருமலைக்கு
வர, லட்சுமியின் கோபத்திற்குப் பயந்து எம்பெருமான் திருமலையினின்றும்
ஓடிவந்து இங்கு (கும்பகோணத்தில்) ஒரு பாதாளக் குகையில் தம்மை
மறைத்துக் கொண்டார். இன்றும் இக்கோவிலில் பாதாளச் சீனிவாசன் என்ற
பெயரில் பூமிக்கடியில் ஒரு திருச்சன்னதி உள்ளது. இவ்விதம் வேங்கடநாதன்
இங்கு வந்து சேர்ந்தார்.

     எம்பெருமானை தொடர்ந்து இவ்விடத்திற்கு வந்த திருமகள் எங்கு
தேடியும் காணமுடியாததால், எவ்விதமாயினும் காணவேண்டுமென்றும் ஏக்கம்
மிகுந்து, (பாலா லிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு
என்னுமாப்போலே) இனி எம்பெருமானை காண்டற்கு ஒரே வழி அவனைக்
குறித்து தவமியற்றலே என்றெண்ணி அவ்விடத்தே இருந்த ஒரு
பொற்றாமரையில் ஒரு சிறு குழந்தையாகத் தோன்ற காத்திருந்த தருணம்
கண்முன் வாய்த்ததென்று அறிந்து ஹேம மஹரிஷி (ப்ருகு முனிவர்)
அக்குழந்தையை வாரியெடுத்து கோமளவல்லி என்ற திருநாமம் சூட்டி
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்த்து வரலானார்.

     இஃதிவ்வாறிருக்க, இராமவதாரத்தில் பட்டாபிஷேகம் சூட்டிக்கொண்ட
ராமன், இலங்கையின்றும் தன்னுடன் வந்த வீடணனுக்குப் பிரியா விடை
கொடுத்தனுப்புங்காலை தம் முன்னோர்களான இட்சுவாகு வம்சத்தாரால்
கடுந்தவம் செய்து பிரம்மனிடமிருந்து பெற்று தினந்தோறும் ஆராதிக்கப்பட்டு
வந்த (ஆராதன விக்ரஹ) எம்பெருமானைக் கொடுத்துவிட்டார். ப்ரணா
வாக்ருதி, வைதீக என்ற இரண்டு விமானங்களால் ஒருங்கேயமைக்கப்பட்ட
அவ்வாராதன எம்பெருமானை வீடணன் கொண்டு வருங்கால், காவிரி,
கொள்ளிட நதியிடையில் அரங்கநாதனாக அசைக்க இயலாது, அரவணையில்
பள்ளிகொண்டுவிட, திகைத்து மலைத்து நின்று செய்வதறியாது கண்ணீர்
சிந்தினான். வீடணனை நோக்கி ப்ரணா வாக்ருதி என்னும் விமானத்துடன்
யாம் இங்கேயே பள்ளிகொள்ள