| 1894. | அம்மானை, அருந்தவம் ஆகிநின்ற அமரர்பெருமான், 
      பதி ஆன உன்னி,
 கொய்ம் மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்கு இறைவன்
 சிவ ஞானசம்பந்தன் சொன்ன
 இம் மாலை ஈர் ஐந்தும் இரு நிலத்தில் இரவும் பகலும்
 நினைந்து ஏத்தி நின்று,
 விம்மா, வெருவா, விரும்பும்(ம்) அடியார், விதியார் பிரியார்,
 சிவன் சேவடிக்கே.
 | 11 |