| 2411. | இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை தன் 
      கை எதிர் நாணி பூண, வரையில்
 கடும் அயில் அம்பு கோத்து, எயில் செற்று உகந்து,
 அமரர்க்கு அளித்த தலைவன்;
 மடமயில் ஊர்தி தாத என நின்று, தொண்டர் மனம் நின்ற
 மைந்தன் மருவும்
 நடம் மயில் ஆல, நீடு குயில் கூவு சோலை நறையூரில்
 நம்பன் அவனே.
 | 2 |