| 2424. | ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு ஐந்தும் 
      இரு மூன்றொடு ஏழும் உடன் ஆய்,
 அன்று இன்றொடு என்றும், அறிவு ஆனவர்க்கும்
 அறியாமை நின்ற அரன் ஊர்
 குன்று ஒன்றொடு ஒன்று, குலை ஒன்றொடு ஒன்று, கொடி
 ஒன்றொடு ஒன்று, குழுமிச்
 சென்று, ஒன்றொடு ஒன்று செறிவால் நிறைந்த திரு
 முல்லைவாயில் இதுவே.
 | 4 |