| 
         
          | 2885. | அடியிரண் 
            டோருடம் பைஞ்ஞான்கி ருபது |   
          |  | தோள்தச முடியுடை வேந்தனை மூர்க்கழித் தமுதன்
 மூர்த்தியும்
 கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கட
 வூர்தனுள்
 வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தர
 னல்லனே.                           8
 |         8, பொ-ரை: ஓர் 
        உடம்பில் இரண்டு கால்களும், இருபது தோள்களும், பத்துத் தலைகளுமுடைய இலங்கை வேந்தனான
 இராவணனின் மூர்க்கத் தன்மையை அழித்த முதல் பொருளாகிய மூர்த்தியும், முடை நாற்றமுடைய 
        பிரமனின் மண்டையோட்டை
 ஏந்தியுள்ளவனும், திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில்
 எழுந்தருளியுள்ள அரன் அல்லனோ?
       கு-ரை:ஐந்நான்கிருபது 
        தோள்-ஐந்நான்காகிய இருபது தோள். தசம்-பத்து. மூர்க்கு-மூர்க்கத்தன்மை. வெடி-முடைநாற்றம்.
 |