| 
         
          | 2900. | அலைவளர் 
            தண்மதி யோடய லேஅடக் கிஉமை |   
          |  | முலைவளர் 
            பாகமு யங்கவல் லமுதல் வன்முனி இலைவளர் தாழைகள் விம்முகா னலிரா மேச்சுரம்
 தலைவளர் கோலநன் மாலையன் தானிருந் தாட்சியே. 1
 |   
            1. பொ-ரை:கங்கையையும், 
        குளிர்ந்த சந்திரனையும் சடை முடியிலே அடக்கி, உமாதேவியின் முலைவளர் பாகத்தைக் கூடவல்ல
 முதல்வனாகிய சிவபெருமான், நீண்ட மடல்களையுடைய தாழைகள்
 மலர்ந்துள்ள கடற்கரைச் சோலையையுடைய இராமேச்சுரத்துள்,
 தலைகளால் ஆகிய அழகிய நல்ல மாலையை அணிந்து அருளாட்சி
 செய்கின்றான்.
      கு-ரை:அலை-கங்கையை. 
        குளிர்ந்த சந்திரனைச் சடையின் பக்கத்தே அடக்கி-தேக்கி. உமைபாகம் கூடவல்ல முதல்வன்.
 கிளை-கொம்பு, மிளார் முதலிய வேறுமரவகைக் கிருப்பதுபோல
 தாழை மரங்களுக்கின்மையால் இது வளர்தாழை யெனப்பட்டது.
 தழைகளையுடையது-தாழை-நீளல். முதல்உயிர் நீண்டசொல்.
 விம்மு-தழைத்த. கானல்-கடற்கரைச்சோலை. தலையால் ஆகிய
 மிகும் அழகையுடைய நல்ல மாலையையுடையவனாகிய சிவபெருமான்
 இருந்து ஆட்சிபுரியும் இடம் இராமேச்சுரம் என்க. அலை-சினையாகு பெயர். ஆட்சிசெய்யுமிடத்தை 
        ஆட்சியென்றது தொழிலாகு பெயர்.
 |