| 
         
          | 3002. | சங்கணி 
            குழையினர் சாமம் பாடுவர் |   
          |  | வெங்கனல் கனல்தர வீசி யாடுவர் அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்
 செங்கணல் இறைசெய்த கோயில் சேர்வரே.     5
 |  
	
             5. 
        பொ-ரை: இறைவர் சங்கினாலாகிய குழை அணிந்த காதினர். சாமவேதத்தைப் பாடுவார். மிகுந்த வெப்பமுடைய
 நெருப்புச் சுவாலை வீசத் தோள்வீசி ஆடுவார். அழகிய
 திருவிழாக்கள் நடைபெறும் அம்பர் மாநகரில் கோச்செங்கட்சோழ
 மன்னன் எழுப்பிய திருக்கோயிலில் அப்பெருமானார்
 வீற்றிருந்தருளுகின்றார்.
       கு-ரை: 
        சங்கை அணிந்த காதையுடையவர். சாமவேதத்தைப் பாடுவார் கொடிய நெருப்புச் சுவாலிக்கத் தோளை வீசி ஆடுவர்
 - என்பது முதலிரண்டடியின் பொருள். சங்கு - ஆகு பெயர்.
      எண்தோள் வீசி 
        நின்றாடும் பிரான் என அப்பர் பெருமான் வாக்கில் வருவதால் வீசி என்பதற்குத் தோள்
 வருவித்துரைக்கப்பட்டது. அழகிய திருவிழாக்களை உடைய
 அம்பர். சங்கண்நல் இறை - நல்ல கோச்செங்கட் சோழர்,
 செய்த கோயில்.
 |