| 
         
          | 3041. | நற்றமிழ் 
        ஞானசம் பந்தன் நான்மறை |   
          |  | கற்றவன் 
            காழியர் மன்னன் உன்னிய அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத்
 துற்றன வல்லவர் உம்ப ராவரே.           11
 |      11. 
        பொ-ரை: நன்னெறி கூட்டுவிக்கும் தமிழ் பரப்பும், ஞானசம்பந்தன், நான்கு வேதங்களையும் கற்று வல்லவனாய்ச் சீகாழி
 மக்கள் தலைவனாய் மனத்தால் தியானித்துப் பாடிய, கேடுகள்
 வாராமல் தடுக்கும் திருவைந்தெழுத்தின் பெருமைகளை
 எடுத்துரைக்கும் இம்மாலையின் பத்துப் பாடல்களையும்
 ஓதவல்லவர்கள் தேவர்களாவார்கள்.
       கு-ரை: 
        உன்னிய - நினைத்துப்பாடிய. அற்றம் இல் மாலை - கேடு அவமானம் முதலியன இல்லையாக்குவிக்கும் (வாராமல்
 தடுக்கும்) மாலை. ஐந்தெழுத்து உற்றன ஆகிய இம்மாலையிலுள்ள
 பத்துப் பாசுரங்களில் வல்லவர் தேவர் ஆவர்.
 |