3072. |
செருமரு தண்டுவர்த் தேரம ணாதர்கள் |
|
உருமரு
வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
திருமரு வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
அருமருந் தாவன அடிகள்வே டங்களே 10 |
10.
பொ-ரை: நெருங்கிய மருதமர இலையின் குளிர்ந்த
துவர்தோய்ந்த ஆடையணிந்த புத்தர்களும், சமணர்களும்
இறைவனை உணரும் அறிவற்றவர்கள். அருகில் நெருங்க முடியாத
தோற்றமுடைய அவர்களின் உரைகளை ஏற்க வேண்டா. இலக்குமி
வீற்றிருக்கும் தாமரை மலர்ந்துள்ள பொய்கை சூழ்ந்த திருந்துதேவன்
குடியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவேடம், உயிர்களின்
பிறவிப்பிணிக்கு அருமருந்தாகி இன்பம் பயக்கும்.
கு-ரை:
செருமருதண்துவர்-நெருங்கிய மருதமரத்தின் குளிர்ந்த
துவர் தோய்ந்த ஆடையணியும், மரு-மருது: கடைக்குறை. தேர்
அமண் ஆதர்கள்-புத்தரோடுகூடிய சமணர்களாகிய தீயோர்,
உருமருவப் படாத் தொழும்பர்-நெருங்க முடியாத அருவருப்பான
தோற்றம். அருமருந்து -கிடைத்தற்கரிய தேவாமிர்தம்.
|