| 
         
          | 3139. | வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள் |   
          |  | நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல் நம்பர மிதுவென நாவினா னவில்பவர்
 உம்பரா ரெதிர்கொள வுயர்பதி யணைவரே.   11
 |  
             11. 
        பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய திருமயேந்திரப் பள்ளியுள் எவ்வுயிரும் விரும்பும்
 சிவபெருமானின் வீரக்கழலணிந்த திருவடிகளைப் போற்றி
 ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை 'இது நம்முடைய
 கடமை' என்ற உறுதியுடன் நாவினால் பாடித் துதிப்பவர்கள்
 தேவர்கள் எதிர்கொண்டு அழைக்க உயர்ந்த இடத்தினை
 அடைவார்கள்.
       கு-ரை: 
        நம்பரம் - நமது கடமை. பரம் - பாரம். வம்பு - மணம். உம்பர் + ஆர் = தேவர்.
 |